தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் இருப்பவர் நடிகர் சதீஸ். இவர் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பிரச்னையும் கொடுக்கமாட்டார். தயாரிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப நல்லபிள்ளையாக நடந்துகொள்வார் என சினிமா வட்டாரத்தில் இவருக்கென நல்ல பெயர்தான் உண்டு.
ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி காற்றில் பரவியது. அதாவது. தற்போது சதீஸ் ஷூட்டிங் வந்தால், தனது காரிலேயே இருந்துகொண்டு தனது உதவியாளரை வைத்து கேரவன் எப்படி இருக்கு என பார்த்துவிட்டு வர சொல்கிறார். கேரவன் சரியில்லை என்றால் வேறு கேரவன் மாற்ற சொல்கிறார் என செய்தி வெளியானது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சதீஸ் தரப்பு. அதாவது, அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஆனால், அது கேரவனில் வசதி குறைவாக இருப்பதாக பார்ப்பதற்காக இல்லை. கொரோனா காலம் என்பதால் சானிடைசர் தெளிக்க சொல்லிவிடுவதாகவும், சதீஸ் வீட்டில் குழந்தை இருப்பதால் கவனமாக இருப்பதற்காக கேரவன் சுத்தமாக இருபதாக பார்க்க சொல்வதாகவும் சதீஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…