பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று படத்தில் நானா? விளக்கம் கொடுத்த சத்யராஜ்!

Published by
பால முருகன்

சத்யராஜ் : பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று  படத்தில் நடிப்பதாக பரவும் தகவலுக்கு நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும், இந்த திரைப்படத்தில் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் சத்தியராஜ் நடிக்கவுள்ளதாகவும்  பிரமாண்டமாக எல்லா மொழிகளிலும் பேசப்படும் வகையில், பிரதமர் மோடி வாழ்கை வரலாற்று படத்தை பெரிய நிறுவனம் எடுக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியாகி மிகவும் வைரலாகி கொண்டு இருந்தது.

இந்த தகவல் உண்மையா இல்லையா? படத்தில் சத்யராஜ் மோடி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வியை எழுப்பி வந்த நிலையில், தற்போது சத்யராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர் பேசியதாவது ” பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியை நான் பார்த்தேன்.

அந்த செய்தி எனக்கே ஒரு செய்தியாகத்தான் தெரியும்.  பிரதமர் மோடி உடைய வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. மக்கள் சமூக ஊடகங்களில் தற்செயலான செய்திகளைப் பரப்புகிறார்கள். நான் மோடியாக நடிப்பதாக பரவும் தகவல் வதந்தி. மோடி பயோபிக் படத்துக்காக யாராவது என்னை அணுகினால் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் யோசிக்கலாம்.

இதுபோன்ற பல வதந்திகள் ஏற்கனவே பரவி வருவதாகவும், தவறான செய்திகளை தயவுசெய்து பரப்ப வேண்டாம். மக்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை தயவுசெய்து நம்பவும் வேண்டாம். ” என கூறி நடிகர் சத்யராஜ் மோடி பயோபிக் படத்தில் தான் நடிப்பதாக வெளியான வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

5 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago