Shakeela about bigg boss 7 tamil [File Image]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்க கூடிய நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் என்று கூறலாம். இதுவரை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில், அடுத்ததாக 7-வது சீசன் வெற்றிகரமாக ஓடி கொன்டு 9 -வது வாரத்தை கடந்துள்ளது. இருந்தாலும் வழக்கமாக இருக்கும் சீசனை போல இந்த சீசன் அந்த அளவிற்கு விறு விறுப்பாக இல்லை என்றே பலரும் கூறிவருகிறார்கள்.
ஏனென்றால், இதுவரை நடந்த சீசன்களில் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் வீட்டிற்குள் காதல் ஜோடி காதலிப்பார்கள். அது பார்வையாளர்களை வெகுவாக கவரும். ஆனால், இந்த சீசனில் பெரிய அளவில் சண்டைகளும் காதல் போன்ற மக்களை கவர கூடிய வகையில் எதுவும் நடக்கவில்லை என்ற காரணத்தால் மக்கள் பலரும் இந்த சீசன் மிகவும் போர் ஆக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் மக்களை போலவே பிரபல நடிகையான ஷகீலா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்து பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி பயங்கரமான மொக்கையாக இருக்கிறது. ஏனென்றால், பிக் பாஸ் வீட்டில் பேசிக்கொண்டு மட்டும் தான் இருக்கிறார்கள். தெலுங்கு பிக்பாஸ் போய் பாருங்கள் எந்த மாதிரியான விளையாட்டுகள் எல்லாம் இருக்கிறது என்று.
எங்களுக்கு அடையாளம் கொடுத்த வீடு அது! பூர்ணிமா செயலால் கொந்தளித்த சனம் ஷெட்டி!
பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி பல வாரங்கள் ஆகிவிட்டது ஆனால் இப்போதுதான் விளையாட்டை ஆரம்பிப்பது போல பூகம்பம் என்ற டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை தெலுங்கில் எல்லாம் மிகவும் சவாலான விளையாட்டுகளை கொடுக்கிறார்கள். வெளிப்படையாக நாமினேஷன் செய்வதாக இருக்கட்டும் மற்ற விஷயங்கள் எல்லாம் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது.
ஆனால் தமிழில் அப்படி அந்த அளவிற்கு எதுவுமே நடக்கவில்லை. எனவே இந்த சீசன் மிகவும் போராக இருக்கிறது . அர்ச்சனாவை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. எப்ப பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கிறார் . பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்களுடைய கதையை சொன்னால் நாம் தான் அழுக வேண்டும் ஆனால் அவர்களை சொல்லிவிட்டு அவர்களை அழுகிறார்கள் இதையெல்லாம் பார்க்கும் போது மொக்கையாக இருக்கிறது” என கூறியுள்ளார். மேலும் ஷகீலா பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…