365 ரூபாய்ல படிப்பை முடிச்சிட்டேன்.. ஆனா என் பேரனை ஸ்கூல்ல சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க – சிவக்குமார் ஆதங்கம்.!

Published by
கெளதம்

சிவக்குமார் : அகரம் அறக்கட்டளை சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்தினர்

சிவகுமார் தனது 100வது திரைப்படத்தை முன்னிட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பிளஸ் டூ தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கவுரவித்து வருகிறார். இது அவரது மகன்களான சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மற்றும் கார்த்தி ‘உழவன் அறக்கட்டளையைத் தொடங்குவதற்கு இது உத்வேகமாக இருந்தது.

கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அகரம் அறக்கட்டளை தற்போது ஏழை மாணவர்களுக்கு சிறிய அளவில் உதவி செய்து வருகிறது. இந்நிலையில், சிவகுமார் கல்வி அறக்கட்டளை, அகரம் இணை ந்து வழங்கும் 45வது ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

அகரம் அறக்கட்டளை சார்பாக 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் “விளிம்பு நிலை”குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி பரிசளித்து ஊக்கப்படுத்தினர்.

விழா மேடையில் பேசிய நடிகர் சிவக்குமார், “கால் அரைக்காசுக்கு நாளரை கத்திரிக்காய், ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்காய்’ இந்த கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் பரிசு தருகிறேன் என்று பேசியதோடு, தனது மேல் படிப்பு செலவு 365 ரூபாய்ல முடிச்சிட்டேன், ஆனா இப்போ கார்த்தி பையனை ஸ்கூல்ல Pre-KG-க்கு சேர்க்க 2.5 லட்சம் கேக்குறாங்க” என மிகவும் ஆதங்கத்துடன் பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய கார்த்தி, “கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் மாணவர்கள் இங்குள்ளவர்களின் ஆங்கிலம் , உடை போன்றவற்றை பார்த்து மிரண்டு விடாதிர்கள் ஒரு நாள் அவர்களை நீங்கள் மிஞ்சுவீர்கள்” என்று கூறினார்.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

4 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

4 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

5 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

6 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

7 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

7 hours ago