vijay and simran [file image]
Simran : விஜயுடன் நடனம் ஆடுவது சவாலாக இருந்தது என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பது அனைவர்க்கும் தெரியும். பல நடிகைகளும் விஜய்யுடன் நடனம் ஆடுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறி இருப்பதை நாம் பார்த்திருப்போம். விஜய்யுடன் பல நடிகைகள் பாடல்களில் நடனம் ஆடினால் கூட அவருக்கு இணையாக பெரிய அளவில் நடிகைகள் நடனம் ஆடியது இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், சிம்ரன் மட்டும் தான் விஜய்க்கு இணையாக நடனம் ஆடி இருக்கிறார்.
குறிப்பாக ஆல்தோட்ட பூபதி பாடலில் விஜய் எந்த அளவிற்கு நடனம் ஆடினாரோ அதை அளவிற்கு சிம்ரனும் அசத்தலாக நடனம் ஆடி இருப்பார். அவருடைய நடனத்தை பார்த்து விஜயையே ஆச்சரியம் அடைந்து எனக்கு இணையாக நடனம் ஆடிய நடிகை சிம்ரன் தான். தனக்கு பிடித்த நடிகையும் சிம்ரன்தான் என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு சிம்ரனை விஜய்க்கு ரொம்பவே பிடிக்கும்.
விஜய் கூட நடனம் ஆட மற்ற நடிகைகள் தான் கடினம் என்று சொல்கிறார்கள் என்றால் சிம்ரனும் அதை தான் சொல்கிறார். பேட்டி ஒன்றில் பேசிய சிம்ரன் ” என்னுடைய திறமை எல்லாம் நடனம் மூலம் தான் வெளியே வந்தது. குறிப்பாக ஆல்தோட்ட பூபதி பாடலில் நடனம் ஆடியது பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அப்போது மட்டுமில்லை இப்போது வரை அந்த பாடலை கொண்டாடடி வருகிறார்கள்.
இந்த பாடலை நான் தியேட்டரில் பார்க்கும்போது பாடலின் சவுண்ட் கேக்கவே கேக்காது ரசிகர்களின் சத்தம் தான் கேட்கும். அந்த பாடலில் பெண்கள் பாடும் படி வரிகள் வராது. ஆண் மாட்டும் தான் பாடுவது போல வரும். இருந்தாலும் அந்த பாடல் எனக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. விஜய் கூட நடனம் ஆடுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அவருடன் நடனம் ஆடுவது ரொம்ப கஷ்டம். அவர் மிகவும் சிறப்பாக நடனம் ஆடுவார். அவருக்கு இணையாக நடனம் ஆட சவாலாக இருந்தது” எனவும் சிம்ரன் தெரிவித்துள்ளார்.
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…