டாக்டர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு 35 கோடி சம்பளத்தை உயர்த்தி கடைசியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக 30 கோடியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வர துடிக்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களையும் தாண்டி தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில், கடைசியாக வெளியான டாக்டர் படத்தில் கூட அதிகமாக டயலாக் பேசியிருக்க மாட்டார். முகத்தில் பெரிய பாவனைகள் செய்திருக்க மாட்டார். வித்தியாசமான கதைக்களத்தை வித்தியாசமாக நடித்து முடித்து இருப்பார். அந்த படம் படக்குழு நினைத்ததை விட பெரிய வெற்றியை பெற்றது.
பல தியேட்டர்களில் புதிய படம் அதுவும் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த வந்துவிட்டதே என படத்தை தூக்கும் நிலை வந்தது என பல தியேட்டர் அதிபர்கள் கூறினார்களாம். அந்தளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை டாக்டர் பெற்றுக்கொடுத்துள்ளது.
அதனால், தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளாராம் சிவகார்த்திகேயன். 27 கோடியாக இருந்த தனது சம்பளத்தை 35 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
இதனை பார்த்து அதிர்ந்த சத்ய ஜோதி பிலிம்ஸ். காரணம் சிவாவை வைத்து அடுத்த படம் தயாரிக்க சத்ய ஜோதி விரும்பியது. பின்னர் சிவகார்த்திகேயனிடம் பேசி, 35 கோடி சம்பளத்தை 30ஆக குறைத்து ஃபைனல் செய்துள்ளார். சத்ய ஜோதிக்கு மட்டும் தான் இந்த இரக்கம். ஏனென்றால் அவர்கள் டாக்டருக்கு முன்கூட்டியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனராம். அதற்கடுத்து வரும் தயாரிப்பாளர்களிடம் 35 கோடி கேட்க தயாராக இருக்கிறதாம் சிவகார்த்திகேயன் தரப்பு.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…