சினிமா

எல்லா பாடல்களும் ஹிட்! பருத்திவீரன் படத்திற்கு சம்பளம் வாங்காத சினேகன்?

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்களின் பட்டியலில் அமீரின் பருத்திவீரன் படம் கண்டிப்பாக இருக்கும் என்றே சொல்லலாம். கார்த்தி, பிரியா மணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, சம்பத் ராஜ், சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில், அமீர் – ஞானவேல் ராஜா விவகாரம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் அறிக்கையை வெளியீட்டினர்.

அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் வருத்தம் தெரிவித்து இருந்தார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு படத்தை வைத்து விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருவதால், பருத்திவீரன் படம் பற்றி தெரியாத தகவலும் வெளியாகி கொண்டு இருக்கிறது.  அந்த வகையில், இந்த படத்தில் சினேகன் மிகவும் நல்ல பாடல்களை எழுதி கொடுத்து இருப்பார்.

பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!

ஆனால், இந்த படத்தில் பாடல்களை எழுதியதற்கு சினேகன் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லையாம். இந்த தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பருத்திவீரன் படம் வெளியான சமயத்தில் பெரிய போராட்டமே நடந்தது. இந்த விஷயத்தை சொல்லலாமா என்று கூட எனக்கு தெரியவில்லை இந்த படத்திற்காக நான் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.

படத்திற்காக நிறைய நண்பர்கள் அவர்களால் முடிந்த உதவியை செய்தார்கள். எனவே நான் சம்பளம் வாங்கவில்லை. ஒரு பாடலுக்கு 10 ஆயிரம் என்றாலும் அந்த படத்திற்கு எனக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் அந்த சமயமே சம்பளமாக கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த பணம் படத்தை ரிலீஸ் செய்ய உதவும் என்பதனால் நான் வாங்கவில்லை. படத்தையும் தாண்டி அமீர் என்னுடைய நண்பர், சகோதரர் என எல்லாம்.  பணம் கொடுத்து உதவும் நிலைமையில் நான் இல்லை எனவே, பணத்தை கேட்டு சிரமை படுத்தவேண்டாம் என்று நான் சம்பளமே வாங்கவில்லை” என சினேகன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

22 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

27 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

50 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

2 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago