சூரி தான் இல்லை..ஆனா நகைச்சுவை நிறைய இருக்கு! ‘தேசிங்கு ராஜா 2’ குறித்து இயக்குனர்!

Published by
பால முருகன்

தேசிங்கு ராஜா 2 : சூரி தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாவது பாகத்தில் இருக்கமாட்டார் எனவும், ஆனால், காமெடிக்கு பஞ்சமே இருக்காது எனவும் படத்தை இயக்கும் என படத்தினை இயக்கி வரும் இயக்குனர் எழில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகத்தில் எந்த அளவுக்கு காமெடி காட்சிகள் இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் எழில்  இயக்கி வருகிறார். விமல், பூஜிதா, பொன்னடா, லொள்ளு சபா சுவாமிநாதன், சிங்கம் புலி, ஷாம்ஸ் புகழ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் எழில்  தேசிங்கு ராஜா  2 குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய இயக்குனர் எழில் ” தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் அதிகமான நகைச்சுவை காட்சிகள் இருக்கும். இந்த படம் முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாக இல்லாததால் இந்த பகுதியில் சூரி இருக்க மாட்டார்.

நகர பின்னணியில் அமைக்கப்பட்டு நேற்று படப்பிடிப்பு நிறைவடைந்தது மூன்று நண்பர்கள், இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் கல்லூரியில் ஒன்றாகப் படித்துவிட்டு பிரிந்து செல்லும் கதை இது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சந்திக்கும் போது, ​​அந்த பெண் போலீஸ் அதிகாரியாகவும், நண்பர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், மற்ற நண்பர் ரவுடியாகவும் இருப்பார்கள்” என படம் பற்றி இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

7 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

8 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

11 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

11 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

12 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

12 hours ago