சினிமா

திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துகிறேன்! ‘பிரேமம்’ இயக்குனர் அதிர்ச்சி அறிவிப்பு!

Published by
பால முருகன்

பிரேம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. மலையாள மொழியில் வெளியான இந்த திரைப்படம் அந்த மொழியிகளில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி கன்னடம் என எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.

இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில், தற்போது தான் இனிமேல் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவருடைய இந்த திடீர் அறிவிப்புக்கு காரணம் அவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறாம்.

இதனை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்து இருக்கிறார். இது குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது ” நான் என்னுடைய சினிமா பயணத்தை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்  இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் எனக்கு நேற்று தான் தெரியவந்தது.

எனவே, இதன் காரணமாக தியேட்டருக்கான என்னுடைய சினிமாவின் பயணத்தை நிறுத்திக்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த மாதிரி நேரத்தில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே, இதன் காரணமாக நான் இனிமேல் வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் ஓடிடியில் இயக்குவேன்” என அறிவித்துள்ளார்.  ஆனால், அறிவித்த பிறகு அவருடைய பதிவு வைரலாக நிலையில் உடனடியாக அந்த பதிவையும் அவர் நீக்கி விட்டார்.

இருப்பினும், இவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால்ம, பிரேமம் எனும் மிக்பெரிய ஹிட் படத்தை கொடுத்த அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக அதே போலவே ஒரு ஹிட் படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த சூழலில் இனிமேல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை இயக்கமாட்டேன் என அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கடைசியாக நடிகை நயன்தாரா, நடிகர் பிரித்திவ் ராஜ் ஆகியோரை வைத்து கோல்டு எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

18 minutes ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

3 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago