சினிமா

திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துகிறேன்! ‘பிரேமம்’ இயக்குனர் அதிர்ச்சி அறிவிப்பு!

Published by
பால முருகன்

பிரேம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. மலையாள மொழியில் வெளியான இந்த திரைப்படம் அந்த மொழியிகளில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி கன்னடம் என எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.

இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார் என்றே சொல்லவேண்டும். இந்த நிலையில், தற்போது தான் இனிமேல் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவருடைய இந்த திடீர் அறிவிப்புக்கு காரணம் அவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறாம்.

இதனை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்து இருக்கிறார். இது குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது ” நான் என்னுடைய சினிமா பயணத்தை நிறுத்துகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்  இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் எனக்கு நேற்று தான் தெரியவந்தது.

எனவே, இதன் காரணமாக தியேட்டருக்கான என்னுடைய சினிமாவின் பயணத்தை நிறுத்திக்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த மாதிரி நேரத்தில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே, இதன் காரணமாக நான் இனிமேல் வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் ஓடிடியில் இயக்குவேன்” என அறிவித்துள்ளார்.  ஆனால், அறிவித்த பிறகு அவருடைய பதிவு வைரலாக நிலையில் உடனடியாக அந்த பதிவையும் அவர் நீக்கி விட்டார்.

இருப்பினும், இவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால்ம, பிரேமம் எனும் மிக்பெரிய ஹிட் படத்தை கொடுத்த அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக அதே போலவே ஒரு ஹிட் படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த சூழலில் இனிமேல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை இயக்கமாட்டேன் என அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கடைசியாக நடிகை நயன்தாரா, நடிகர் பிரித்திவ் ராஜ் ஆகியோரை வைத்து கோல்டு எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

1 minute ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

28 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago