சினிமா

தொடர்ச்சியாக ரஜினி படங்கள் பிளாப்! சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த கேப்டன் விஜயகாந்த்!

Published by
பால முருகன்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் எல்லாம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பெரிய அளவில் வெற்றியை பெற்று வந்த காரணத்தால் அவருக்கு ரசிகர்கள் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தனர். ஆனால், ஒரு காலகட்டத்தில் ரஜினி நடித்த படங்கள் தோல்வி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு பக்கம் விஜயகாந்த் நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது .

இதன் காரணமாக  அந்த சமயம் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்றான ஜெமினி சினிமா பத்திரிகை சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் என்ற தலைப்புடன் ஒரு கட்டுரையை வெளியீட்டு இருந்தது. அந்த கட்டுரையில் விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த கதை மற்றும்  செய்த உதவிகள் மாற்றும் எதற்காக அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதற்கான விவரத்தையும் கொடுத்திருந்தார்கள்.

முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த மிஸ்டர் பாரத், நான் அடிமை இல்லை, விடுதலை, மாவீரன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதே சமயம் விஜயகாந்த் கரிமேடு கருவாயன், நம்பினார் கெடுவதில்லை, சிகப்பு மலர்கள், வசந்த ராகம், எனக்கு நானே நீதிபதி, ஊமை விழிகள், சிம்ஹாசனம் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவியத்தொடங்கியது மட்டுமின்றி ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது. இதனால் விஜயகாந்த் படங்கள் வெளியானால் அந்த தியேட்டரே திருவிழா போல தான் இருக்குமாம். அந்த சமயம் எல்லாம் ரஜினி படங்களை மிஞ்சும் அளவிற்கு விஜயகாந்த் படங்களுக்கு ஓப்பனிங் கிடைத்ததாம்.

இதன் காரணமாக தான் அந்த ஜெமினி சினிமா பத்திரிகை  சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் என ஒரு கட்டுரையை வெளியீட்டு இருந்ததாம். அந்த சமயம் பத்திரிகையில் தன்னுடைய பெயர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வந்ததை பற்றி விஜயகாந்த்திடம் கேள்வியும் கேட்கப்பட்டதாம். அதற்கு விஜயகாந்த்  அந்த சமயமே கூறிய பதில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

அப்படி என்ன சொன்னார் என்றால் “எனக்கு சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்கள் மீதெல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. மக்கள் எனக்கு என்னை ஒரு நல்ல நடிகராக நினைத்து நடிகன் என்ற பட்டம் கொடுத்தாலே போதும். அதுவே எனக்கு மிகப்பெரிய பெருமையான விஷயம் தான்.  தொடர்ச்சியாக ஆக்சன் படங்களில் நடித்து வந்த எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய இந்த வெற்றிக்கு தமிழ் மக்கள் தான் காரணம்” எனவும்” விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

7 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago