விஷாலின் 34-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகி படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், 3-வது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது.
இவர்கள் மீண்டும் இணையும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து படத்தின் ரகசிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த படத்தின் கதையை இயக்குனர் ஹரி முதலில் சூர்யாவுக்கு தான் சொன்னாராம். ஆனால், சூர்யா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறியுள்ளாராம் . அதற்கு ஹரி மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
இதனை தொடர்ந்து ஹரி சூர்யாவுக்கு சொன்ன கதைகளில் ஒன்றில்தான் விஷால் நடிக்கிறார். விஷால் நடிக்கும் இந்த திரைப்படத்தில் பல அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கிறதாம். அதோடு ஃபேமிலி சென்டிமெண்டும் உண்டு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…