ரஜினி அப்பாவுக்கு ரொம்ப நன்றி! ஜெயிலர் மகன் வசந்த் ரவி எமோஷனல்!

Published by
பால முருகன்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வசந்த்ரவி, தமன்னா, விநாயகம், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.  3 வாரங்கள் ஆகியும் படம் நல்ல வரவேற்பை பெற்று படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையில், படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த் ரவி ரஜினிக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” விலைமதிப்பற்ற நினைவுகளை பரிசளித்த ரஜினி அப்பாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளை நான் இந்த தருணத்தில் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.  படப்பிடிப்பில் அவருடன் கழித்த ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் அழியாத நினைவாக நெஞ்சில் இருக்கும்.

ஜெயிலர் படப்பிடிப்பு ரஜினி சார் என்னிடம் அவர் சொன்ன விஷயங்கள் என் நடிப்புத் திறனை மட்டுமன்றி, வாழ்க்கை பற்றிய புரிதலை கொடுத்துள்ளது. அந்த தருணங்களை நான் என்றுமே மறக்கவே மாட்டேன்.  இது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம்” என மிகவும் உருக்கமாக நடிகர் வசந்த் ரவி பதிவிட்டுள்ளார்.

மேலும், வசந்த் ரவி ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். அவர் நடித்த காட்சிகள் குறைவாக இருந்தாலும் கூட தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருப்பார். படத்தில் மற்ற கதாபாத்திரங்களை போலவே, அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

10 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

53 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

2 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

3 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago