இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பாலாஜி, சுப்பிரமணியம் சிவா, ராதாரவி, டேனியல் பாலாஜி, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
சிறந்த கேங்ஸ்டர் திரைப்படமாக உருவான இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.
ஆனால் தனுசும்,வெற்றிமாறனும் தற்போது பிசியாகவுள்ளதால் படம் எடுக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா வடசென்னை 2 குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆண்ட்ரியா “வடசென்னை 2 எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை..நானும் தனுஷ் சாரும் வெற்றிமாறனிடம் வடசென்னை 2 குறித்து கேட்டால் அது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்..நானும் வடசென்னை 2 படத்திற்காக காத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…