சண்டை போட்ட நடிகை! செருப்பை வைத்து தலையில் அடித்துக் கொண்ட பாரதிராஜா!

Published by
பால முருகன்

பாரதி ராஜா : 80,90 காலாட்டத்தில் முன்னணி இயக்குனராக கலக்கி வந்த பாரதி ராஜா பல நடிகைகளை தங்களுடைய படங்களில் நடிக்க வைத்து முன்னணி நடிகையாக உதவி செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அதில் ஒருவர் நடிகை வடிவுக்கரசி. பாரதி ராஜா இயக்கத்தில் வடிவுக்கரசி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகம் ஆனார்.

இந்த படத்திற்கு பிறகு தான் தொடர்ச்சியாக படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் ஆனார். ஆனால், ஒரு முறை கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த சமயத்தில் வடிவுக்கரசிக்கும்  இயக்குனர் பாரதி ராஜாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இந்த பிரச்சனையின் போது ஒரு கட்டத்தில் ரொம்பவே கடுப்பான பாரதி ராஜா செருப்பை எடுத்து தன்னுடைய தலையிலே அடித்து கொண்டாராம்.

கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க வடிவுக்கரசி கமிட் ஆன போது ஒரு முறை படப்பிடிப்புக்கு வரும் படி இயக்குனர் பாரதி ராஜா கூறினாராம். பின் அவரும் ரயில் ஏறி படப்பிடிப்புக்கு சென்றாராம். அன்று வடிவுக்கரசிக்கு பிறந்த நாள் என்பதால் கையிலே இனிப்பு எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் இருந்த அனைவர்க்கும் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்தாராம். பிறகு பாரதி ராஜா வடிவுக்கரசியை அழைத்து நீ நடிக்கும் இந்த கதாபாத்திரம் படத்தில் வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினாராம்.

இதனால் ரொம்பவே கடுப்பான நடிகை வடிவுக்கரசி பாரதி ராஜாவுடன் சண்டைபோட தொடங்கினாராம். அந்த சமயம் வடிவுக்கரசிக்கு விஜயகுமார் எதாவது சொல்லி தன்னுடைய கதாபாத்திரத்தில் மஞ்சுளா  நடிக்கிறார் போல என்று தோணுவிட்டதாம். இதனை சொல்லியே வடிவுக்கரசி பாரதிராஜாவிடம் சண்டைபோட்டாராம். பிறகு பாரதி ராஜாவும் சற்று கடுப்பாகி தன்னுடைய செருப்பை கழட்டி தன்னுடைய தலையில் அடித்து கொண்டு இந்த படத்தில் உன்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு யாரவைத்து வைத்து நான் எடுத்தால் என்னை செருப்பால அடி என்று கூறி அடித்து கொண்டே இருந்தாராம்.

பிறகு வடிவுக்கரசியிடம் நீ கோப படாமல் ரூமில் போய் இரு நான் இரவு முடிவு செய்துவிட்டு உன்னிடம் பேசுகிறேன் என்று கூறினாராம். அதனை தொடர்ந்து நடிகை வடிவுக்கரசி நீங்கள் என்ன என்னை தேர்வு செய்வது நான் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டு படத்தில் இருந்து விலகி விட்டாராம். இந்த தகவலை நடிகை வடிவுக்கரசியே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 minutes ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

39 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

1 hour ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

3 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago