The Kerala Story box office collection [Image source : file image ]
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி ‘தி கேரளா ஸ்டோரி ‘ திரைப்படம் வசூலில் பல கோடிகளை அள்ளி வருகிறது.
சர்ச்சைகள் முதல் தடைகள் வரை அனைத்தையும் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கியுள்ள இப்படத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் இப்படம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. நேற்று வரை இந்த திரைப்படம் ரூ.198.97 கோடி வசூலித்த நிலையில், இன்று ரூ.200 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சையும் எதிர்ப்பும்:
கடும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புக்கும் மத்தியில் கடந்த 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி எனும் பாலிவுட் திரைப்படமானது ஹிந்தி, தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாகி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தவகையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஒரு சில மாநிலங்கள் வரிவிலக்கை அறிவித்திருந்தன. அதேநேரம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்கள் இந்தப் படத்தை திரையிட தடையும் விதித்திருந்தது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி படம் மே 5 அன்று வெளியிடப்பட்டது.மே 16 அன்று, படம் ரூ.150 கோடியை தாண்டியது. 18 ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸில் படம் ரூ.204.47 கோடியாக உள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…