சந்திரமுகி படத்திற்கு நோ சொன்ன சிம்ரன்? பலநாள் கழித்து வந்த உண்மை சீக்ரெட்!!

Published by
பால முருகன்

Simran  : சந்திரமுகி படத்தில் நடிக்க சிம்ரன் மறுத்த உண்மையான காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. பல நடிகைகளுக்கு இந்த கனவு நிறைவேறினால் கூட ஒரு சில நடிகைகளுக்கு அவர்கள் பீக்கில் இருந்த சமயத்தில் நிறைவேறியது இல்லை என்றே கூறவேண்டும். அப்படி தான் நடிகை சிம்ரன்க்கும் கூட. சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்தில் ரஜினிக்கு ஜோடியாக தான் நடிக்க ஆசைபட்டாராம்.

அவருடைய ஆசை ‘பேட்ட’ படத்தின் மூலம் நிறைவேறியது. இருந்தாலும் ஆரம்ப காலத்தில் பீக்கில் இருந்த போது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவரிடம் இன்னுமே இருக்கிறதாம். இருப்பினும் ஆரம்ப காலத்தில் அதாவது ‘சந்திரமுகி’ படத்திலே சிம்ரனுக்கு ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் இல்லை பிரபுவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் தான் சிம்ரனுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.

இந்த படத்தில் சிம்ரன் நடிக்காத காரணம் சிம்ரன் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருந்தது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால், உண்மையான காரணமே அது இல்லயாம். உண்மையான காரணமே ரஜினிகாந்த் படத்தில் நடித்தால் அவருக்கு ஜோடியாக மட்டுமே தான் நடிக்கவேண்டும் என்ற முடிவில் சிம்ரன் இருந்தாராம்.

சந்திரமுகி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததும் அட டே ரஜினிக்கு ஜோடி இல்லையா அப்படி என்றால் படம் வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டாராம். கண்டிப்பாக நயன்தாரா நடித்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு வந்திருந்தால் கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

51 minutes ago

”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…

2 hours ago

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

2 hours ago

டாஸ்மாக் ரெய்டுக்கு மத்தியில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!

சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…

2 hours ago

ஐபிஎல் 2025 : பிளேஆஃப் சுற்றுக்கு செல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…

3 hours ago

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…

3 hours ago