முக்கியச் செய்திகள்

புஷ்பா படத்தில் நடிக்க மறுத்த டாப் நடிகர்? தேசிய விருதை தட்டித்தூக்கிய அல்லு அர்ஜுன்!

Published by
பால முருகன்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அதைப்போல, படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த பாடல் பிரிவில் இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ள நிலையில், படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் சுகுமார் நடிகர் அல்லு அர்ஜுனிடம் கூறவில்லையாம் முதல் முறையாக டாப் நடிகரான மகேஷ்  பாபுவிடம் தான் கூறினாராம். ஆனால், சில காரணங்களால் மகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுக்க இயக்குனர் சுகுமார் அடுத்தாக அல்லு அர்ஜுனிடம் கூறி படத்தை ஓகே செய்துவிட்டாராம்.

சுகுமார் புஷ்பா படத்தின் கதையை கூறிவிட்டு படத்தில் இருந்து மகேஷ் பாபு விலகிய பின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றையும் வெளியீட்டு இருந்தார். அந்த பழைய பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதில் ” கிரியேட்டிவ் வேறுபாடுகளால் சுகுமாருடன் என்னுடைய படம் நடக்கவில்லை. அவருடைய புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி வாழ்த்துகள்.

படம் மிகவும் அருமையாக இருக்கும் கதை கேட்டவுடனே எனக்கு பிடித்திருந்தது. அந்த படத்தில் பணிபுரியும் ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன். சில காரணங்கள் என்னால் நடிக்கமுடியவில்லை” என பதிவிட்டு இருந்தார். நேற்று புஷ்பா படத்தில் நடித்தற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மகேஷ் பாபுவின் பழைய ட்வீட் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

36 minutes ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

1 hour ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

2 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

4 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

6 hours ago