படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

Published by
பால முருகன்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய படங்களை இப்போது ரீ-ரிலீஸ் செய்வது தான். அப்படி பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டு வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்து வருகிறது. குறிப்பாக ‘கில்லி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘3’ உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

எனவே, இதன் காரணமாக பல தயாரிப்பாளர்களும். பல நடிகர்களும் தங்களுடைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான படையப்பா படத்தை டிஜிட்டல் மூலம் எடிட் செய்து ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

பிரபல தயாரிப்பாளரான தேனப்பன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தாராம். இவர் தான் படையப்பா படத்தை தயாரித்து இருந்தவரும் கூட. இவர் படையப்பா சமயத்தில் ரஜினியை சந்தித்ததாம். படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தாராம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தேனப்பனை பார்த்ததால் ரஜினிகாந்த் மிகவும் ஷாக் ஆகிவிட்டாராம்.

இந்த சந்திப்பின் போதுதான் தேனப்பன் ரஜினிகாந்திடம் சார் படையப்பா படத்தை ரீ -ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. கண்டிப்பாக இந்த நேரத்தில் நாம் ரீ-ரிலீஸ் செய்தால் படம் அமோக வரவேற்பை பெரும் என்று கூறினாராம். அதற்கு ரஜினிகாந்த் நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது என்று யோசிக்க தொடங்கி இருக்கிறாராம். தற்போது படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பேச்சுவார்த்தை முதற்கட்டத்தில் இருக்கிறது எனவும் இந்த தகவலை யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன், லட்சுமி, செந்தில், அப்பாஸ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான இந்த படையப்பா திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அந்த சமயமே வசூலில் கலக்கிய இந்த படம் இப்போது ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

5 minutes ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

46 minutes ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

53 minutes ago

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

2 hours ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

2 hours ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

2 hours ago