atlee [File Image]
இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 1,100 கோடி வசூல் செய்திருந்தது. ஷாருக்கானுக்கும் அட்லீக்கும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்து ஒரு சுவாரசியமான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயிரம் கோடி வசூல் செய்த ஜவான்! தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த அட்லீ!
அது என்னவென்றால், இயக்குனர் அட்லீ விஜய், ஷாருக்கான் ஆகியோரை வைத்து பிரமாண்டமாக ஒரு படம் எடுக்கவுள்ளாராம். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்று முன்னதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால், படம் வெளியான பிறகு விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ள என்பது தெரியவந்தது.
ஆனால் ஜவான் படத்தின் போது விஜய்யுடன் நடிக்க தயாராக இருப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். அதேபோல் விஜய்யும் ஷாருக்கானுடன் நடிக்க தயார் என்று சில பேட்டிகளிலும் கூறியுள்ளார். இதனையடுத்து, சமீபத்தில், பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று அட்லீயிடம் ஒரு படத்தை இயக்குகங்கள் என்று கூறி முன் வந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறேன் எனவும் இயக்குனர் அட்லீயே பேட்டி ஒன்றில் தெரிவித்தும் இருந்தார். எனவே, ஷாருக்கான் மற்றும் விஜய் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதையை தான் அட்லீ எழுதி வருவதாகவும், எழுதி முடித்த பிறகு படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, சமீபகாலமா ஷாருக்கான் நடிக்கும் படங்கள் எல்லாம் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. அதைப்போல மற்றோரு பக்கம் விஜய் நடிக்கும் படங்கள் எல்லாம் 600 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இருவரும் இணைந்து படம் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் 2000 கோடி வசூல் செய்யும் என்பதில் எந்த சந்தகேமும் இல்லை.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…