முக்கியச் செய்திகள்

Abhirami : விருமாண்டி படத்துக்கு அப்புறம் சினிமாவை விட்டு போன காரணம் இது தான்! மனம் திறந்த அபிராமி!

Published by
பால முருகன்

கமல்ஹாசன் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு சமஸ்தானம், ஸ்ரீராம், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இந்த படங்கள் எல்லாம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

ஆனால், விருமாண்டி படத்தில் நடித்து முடித்த பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அவருடைய பெயரும் வெளியே தெரிந்தது. ஆனால், இந்த படத்தில் நடித்த பிறகு ஒரு சில ஆண்டுகளாக அபிராமி சினிமாவில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகினார்.

திடீரென அபிராமி சினிமாவை விட்டு விலகிய காரணத்தால் அந்த சமயம் பல வதந்தி தகவல் பரவியது. ஆனால், இதுவரை விருமாண்டி படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் என் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்ற காரணத்தை பற்றி அபிராமி  பேசாமல் இருந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர்  ” எனக்கு படிப்பு மீது ஆர்வம் அதிகமாக இருந்தது எனவே நான் விருமாண்டி படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே வெளிநாட்டுக்கு சென்று படிக்கவேண்டும் என முடிவெடுத்து அதற்கான விரவங்களை நிரப்பி பதிவு செய்து இருந்தேன். விருமாண்டி படத்தில் நடித்து முடித்த பிறகு நான் அங்க செல்ல நேரம் சரியாக இருந்தது.

விருமாண்டி முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று நன்றாக படித்தேன் அங்கு தான் என்னுடைய டிகிரியை நான் முடித்தேன். அங்கு எனக்கு வேலையும் கிடைத்தது 6 வருடங்கள் அங்கு தான் வேலை செய்தேன். பிறகு விஸ்வரூபம் படத்தில் டப்பிங் பேசுவதற்காக வாய்ப்பு கிடைத்தது அதில் பேசினேன் அதிலிருந்து இந்த துறையை விட்டு நாம் என் போகவேண்டும் என முடிவெடுத்து மீண்டும் நடிக்க தொடங்கி விட்டேன்” எனவும் அபிராமி தெரிவித்துள்ளார். மேலும் அபிராமி தற்போது விஜய் சேதுபதியின் 50-வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

9 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

10 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

11 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

11 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

12 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

13 hours ago