Categories: சினிமா

வடிவேலு ஹ்யூமர் சக்கரவர்த்தி…கருத்து வேறுபாடு குறித்து தம்பி ராமையா பளிச்.!

Published by
கெளதம்

Vadivelu: வடிவேலுவும் தனக்கும் இன்றும் மனக்கசப்பு இருப்பதாக எழுப்பட்ட கேள்விக்கு தம்பி ராமையா பெரும் தன்மையுடன் பதில் அளித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நட்சத்திரமாக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் அசால்ட்டாக காமெடி செய்து விட்டு கிளம்பி விடுவார். இவர் தனியாக காமெடி செய்வதை விட இவரை சுற்றி இருக்கும் சக நடிகர்களை வைத்து காமெடி செய்யும் காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.

இவ்வாறு பல நடிகர்களுடன் வடிவேலு காமெடி செய்திருப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது சக நடிகர்கள் தன்னை மிஞ்சி வளர்ந்து விடுவார்களோ… அல்லது புகழின் உச்சம் தொட்டு விடுவார்களோ… என்று நினைக்கக் கூடியவர்.

அந்த விஷயத்தில் அவர் மிகவும் கண்ணியமுடன் இருப்பவர், அவ்வாறு நடிகர்களை பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார். அவர் நடிக்கும் படத்திலும் அவர் நடிக்க விடாமல் செய்துவிடுவார். இது போல் பல படங்களில் பலரை இவ்வாறு செய்து இருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக வடிவேல் உடன் நடித்திருந்த சில நகைச்சுவை கலைஞர்கள் அவரை பற்றி நேர்காணலில் கருத்துக்கள் பதிவிடுவது வழக்கம். அதே போல் தான் நடிகர் தம்பி ராமையாவும், வடிவேலு உடன் தம்பி ராமையா இடம்பெறும் காமெடி காட்சிகள் பலரை ராசிக்க வைத்துள்ளது.

நடிகர் தம்பி ராமையா நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, கதை ஆசிரியர் இயக்குனரும் கூட. அந்த வகையில், வடிவேலுவை வைத்து ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்தில் வரும் சில காட்சிகளை தயாரிப்பாளர் நீளம் அதிகமாக இருப்பதாய் சுட்டி காட்டி நீக்க சொன்னதால் வடிவேவின் காட்சிகளை தம்பி ராமையா நீக்கியதால், இருவரது உறவு விட்டுப் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய நடிகர் தம்பி ராமையா, “நான் குணசித்திர நடிகர், படங்களில் நடிப்பது அப்படி இப்படின்னு…தனியாக சென்று விட்டேன். ‘அவர் ஹ்யூமர் சக்கரவர்த்தி..நான் குருடரில் விழுந்த மண்..அவர் பேரரசு’ என பெரும் தன்மையுடன் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வந்தது. ஆனால், ஒரு விழா மேடையில் வடிவேலு காமெடியை எடுத்து விட ஷங்கர் விழுந்து விழுந்து சிரித்தார். இது தான் வடிவேலுவின் ஹ்யூமர் என்று கூறியதுடன், எனது குடும்பத்தினருக்கும் அவரை ரொம்ப பிடிக்கும் என கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago