Categories: சினிமா

வடிவேலு ஹ்யூமர் சக்கரவர்த்தி…கருத்து வேறுபாடு குறித்து தம்பி ராமையா பளிச்.!

Published by
கெளதம்

Vadivelu: வடிவேலுவும் தனக்கும் இன்றும் மனக்கசப்பு இருப்பதாக எழுப்பட்ட கேள்விக்கு தம்பி ராமையா பெரும் தன்மையுடன் பதில் அளித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நட்சத்திரமாக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. அந்த அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் அசால்ட்டாக காமெடி செய்து விட்டு கிளம்பி விடுவார். இவர் தனியாக காமெடி செய்வதை விட இவரை சுற்றி இருக்கும் சக நடிகர்களை வைத்து காமெடி செய்யும் காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.

இவ்வாறு பல நடிகர்களுடன் வடிவேலு காமெடி செய்திருப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது சக நடிகர்கள் தன்னை மிஞ்சி வளர்ந்து விடுவார்களோ… அல்லது புகழின் உச்சம் தொட்டு விடுவார்களோ… என்று நினைக்கக் கூடியவர்.

அந்த விஷயத்தில் அவர் மிகவும் கண்ணியமுடன் இருப்பவர், அவ்வாறு நடிகர்களை பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார். அவர் நடிக்கும் படத்திலும் அவர் நடிக்க விடாமல் செய்துவிடுவார். இது போல் பல படங்களில் பலரை இவ்வாறு செய்து இருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக வடிவேல் உடன் நடித்திருந்த சில நகைச்சுவை கலைஞர்கள் அவரை பற்றி நேர்காணலில் கருத்துக்கள் பதிவிடுவது வழக்கம். அதே போல் தான் நடிகர் தம்பி ராமையாவும், வடிவேலு உடன் தம்பி ராமையா இடம்பெறும் காமெடி காட்சிகள் பலரை ராசிக்க வைத்துள்ளது.

நடிகர் தம்பி ராமையா நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, கதை ஆசிரியர் இயக்குனரும் கூட. அந்த வகையில், வடிவேலுவை வைத்து ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்தில் வரும் சில காட்சிகளை தயாரிப்பாளர் நீளம் அதிகமாக இருப்பதாய் சுட்டி காட்டி நீக்க சொன்னதால் வடிவேவின் காட்சிகளை தம்பி ராமையா நீக்கியதால், இருவரது உறவு விட்டுப் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய நடிகர் தம்பி ராமையா, “நான் குணசித்திர நடிகர், படங்களில் நடிப்பது அப்படி இப்படின்னு…தனியாக சென்று விட்டேன். ‘அவர் ஹ்யூமர் சக்கரவர்த்தி..நான் குருடரில் விழுந்த மண்..அவர் பேரரசு’ என பெரும் தன்மையுடன் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வந்தது. ஆனால், ஒரு விழா மேடையில் வடிவேலு காமெடியை எடுத்து விட ஷங்கர் விழுந்து விழுந்து சிரித்தார். இது தான் வடிவேலுவின் ஹ்யூமர் என்று கூறியதுடன், எனது குடும்பத்தினருக்கும் அவரை ரொம்ப பிடிக்கும் என கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

2 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

2 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

2 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

3 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

3 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

4 hours ago