Vijayakanth [file image]
நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை எல்லாம் தாண்டி ஆக்சன் படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தவர். ஒரு காலத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவரும் இவர் தான். 1980, 90 கால கட்டத்தில் எல்லாம் இவருடைய படங்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் ஆகி கொண்டு இருந்தது.
அப்படி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்துடன் நடிக்கவே சில நடிகைகள் மறுப்பு தெரிவித்தும் இருக்கிறார்கள். அந்த வகையில், அன்னை என் தெய்வம் படத்தில் நடிக்க மறுத்த நடிகைகள் யார் எல்லாம் என்பதற்கான விவரத்தை பிரபல மூத்த நடிகையான வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இயக்குனர் சிவசந்திரன் கதையில் விஜயகாந்த் சாருடன் நான் அன்னை ஒரு தெய்வம் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தேன்.
அந்த திரைப்படம் அம்மா அப்பா பையன் இவர்களின் மூன்று பேரும் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட வேண்டிய திரைப்படம் படத்தின் கதை எல்லாம் கேட்டு விட்டேன். கதை படத்தின் கதையைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது முதலில் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க நடிகை ராதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ராதிகா கதையை கேட்டுவிட்டு படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் .
பரிதாப செய்தியை காட்டிய இயக்குனர்? உடனடியாக உதவிய விஜயகாந்த்!
அதேபோல ஜீவித்தா அந்த சமயம் ரொம்பவே பிஸியாக இருந்தார் எனவே அவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. ஹீரோயினை போலவே அம்மா காப்பாத்திரத்தில் நடிக்க நடிகை லட்சுமி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது . அவர் நான் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டாரார். பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கே.ஆர்.விஜயாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்” எனவும் நடிகை வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான இந்த அன்னை என் தெய்வம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். படத்தில் ஆச்சி மனோரமா, ஒய்.ஜி.மகேந்திரன், வடிவுக்கரசி, சிவச்சந்திரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…