Categories: சினிமா

தலைவர் தரிசனம்…ரஜினிகாந்தை சந்தித்த வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்..! வைரலாகும் புகைப்படங்கள்.!!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாக பலரும் இருக்கிறார்கள். சினிமா துறையை போல கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட ரஜினியின் ரசிகர்கள் தான்.

Rajinikanth [Image source : twitter/ @RajiniFollowers]

எனவே, பல கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை சந்தித்து அதற்கான புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், கொல்கத்தா அணியின் இளம் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் இருவரும் ரஜினி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வருண் சக்கரவர்த்தி ” இரவு வானில் தினமும் ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது நடக்குமா என காத்திருந்தேன் ஆமாம்..இப்போது  அது நடந்தது… “ஒரே & ஓன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” சாரை சந்தித்தேன்.
அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினராக தீவிரமாக உணர்ந்தேன்.“LIVING WITH HIMALAYAN MASTERS” என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி சார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

வெங்கடேஷ் ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” தலைவர் தரிசனம் என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்துவிட்டது.சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த ரஜினிகாந்தை கடைசியாக சந்தித்தேன். என்ன ஒரு  அனுபவம். அவருடன் பேசும்போது பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தது போல் உணர்ந்தோம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

5 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

5 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

7 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

7 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

8 hours ago