Ravi Shankar RIP [file image]
ரவி ஷங்கர் : தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ரவி ஷங்கர். 63 வயதான இவர் சென்னை, கே.கே.நகரில் வசித்து வந்த நிலையில், இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். திடீரென அவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறப்புக்கு பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இவருடைய இறப்பு செய்தி குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் “திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் தொடர்பையும் குறைத்துக் கொண்டார். நேற்று இரவு கே கே நகரில் உள்ள தன் அறையில் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார் ரவிஷங்கர்!
தனிமையே அவரை கொன்றுவிட்டதாக கருதுகிறேன்.
ஒரு மிகப் பெரிய இயக்குனராக அல்லது பாடலாசிரியராக வலம் வருவார் என்று எதிர்பார்த்தேன். தமிழ் சினிமாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னை தொலைத்துக் கொண்டார்.
போய்வாருங்கள் ரவிஷங்கர்… வலியோடு உங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்… ஒரு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ காற்றில் கரைந்து போனது” என கூறியுள்ளார்.
‘குதிரை’ சிறுகதை மூலம் பாக்யா பத்திரிகையில் எழுத்தாளராக தனது பயணத்தை துவங்கிய ரவிஷங்கர், இயக்குநர் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்: சூர்யவம்சம் படத்தில் ரோசாப்பூ உள்ளிட்ட பல பாடல்களையும் எழுதியுள்ளார். அது மட்டுமின்றி, வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இவர் எழுதியது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…