பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகரை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தபோது அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அருள் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம், தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நாளை கூட்டும் நிலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.