சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபாநாயகரை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தபோது அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அருள் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம், தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நாளை கூட்டும் நிலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக இணைந்து கொண்டு பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தியபோது சில பெண்கள் கதறி அழுதுகொண்டு உள்ளார்கள். அப்போது பாமக எம்.எல்.ஏ அருள் திடீரென மிகவும் கோபமடைந்து அங்கிருந்த பெண்களுக்கு முன் உங்களுடைய வீட்டில் ஆம்பள இல்லையா? எதற்காக இங்கு வரவில்லை என்பது போல மிகவும் கீழ்த்தரமாக பேசினார்.அவர் பேசியதை பார்த்து சில பெண்கள் தங்களுடைய கைகளையும் […]