தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Published by
பால முருகன்

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார்.

தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தை தமிழில் நடிகர் விஜய்யை வைத்து கில்லி என்ற பெயரில் இயக்குனர் சரண் ரீமேக் செய்து இருந்தார். இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விஜயின் மார்க்கெட்டை உயர்த்த பெரிய உதவியாக அமைந்தது என்றே கூறலாம். ஒக்கடு படத்தை விட கில்லி படத்திற்கு தான் அதிகமான வரவேற்பும் கிடைத்தது.

இந்த கில்லி படம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த திரைப்படமும் கூட. அந்த சமயம் முதல் தற்போது வரை இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி கூட இந்த திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் வெற்றியடைந்ததுக்கு கதை ஒரு பக்கம் காரணம் என்றால் மற்றோரு காரணம் படத்தின் இசை என்று கூறலாம். இந்த படத்தின் இசை அந்த அளவிற்கு படத்திற்கு பக்க பலமாக இருந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நல்ல பாடல்களையும், பின்னணி இசையையும் வித்யாசாகர் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் வித்யாசாகர்  கில்லி படத்தின் பாடல்கள் உருவான விதம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதலில் கில்லி படத்திற்கு நான் இசையமைக்க ஒப்பந்தம் ஆன போது தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் என்னிடம் ஒக்கடு படத்தில் இருந்த 2 பாடல்களை மட்டும் அப்படியே எடுத்து தமிழில் போடவேண்டும் என்று கூறினார்.

எனக்கு அப்படி எடுத்து பண்ணுவதில் சுத்தமாக விருப்பம் இல்லை அது தெலுங்கு பாட்டு தெலுங்கு பாட்டு வேண்டாம் நாம் தமிழில் புதிதாக பண்ணலாம் என்று கூறினேன். அதற்கு தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் என்ன சார் இப்படி சொல்றீங்க? தெலுங்கில் அந்த பாடல்கள் எல்லாம் பெரிய ஹிட் என்று கூறினார். அதற்கு நான் அவரிடம் நீங்கள் தமிழில் செய்ய போவது அதனை விட பெரிய அளவில் ஹிட் ஆகா போகிறது காத்திருந்து பாருங்கள் என்று கூறினேன்.

நான் இவ்வளவு சொல்லியும் படத்தின் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. பிறகு எனக்காக அவர் ஒற்றுக்கொண்டார். நான் சொன்னது போல நல்ல பாடல்களை படத்தில் கொடுத்தேன். அப்படி போடு பாடலை எல்லாம் 30 நிமிடத்தில் முடித்து கொடுத்துவிட்டேன். பாடலும் இப்போது வரை கொண்டாடப்படுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது” எனவும் வித்யாசாகர்  கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

17 minutes ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

55 minutes ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

1 hour ago

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…

2 hours ago

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

3 hours ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

3 hours ago