Categories: சினிமா

“வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் விஜய் ஆண்டனி.!

Published by
கெளதம்

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளி மயில்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நோக்கி படக்குழு நகர்ந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளது.

vallimayilmovie [Image source : file image]

திண்டுக்கல்லில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி, கொடைக்கானல், தேனி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது.

விஜய் ஆண்டனியைத் தவிர, வள்ளி மயிலில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராமப்புற பொழுதுபோக்கு படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

நல்லுசாமி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்படும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார் மற்றும் லெவெல்லின் ஆண்டனி கோன்சால்வ்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். இதற்கிடையில், வள்ளி மயிலின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், படத்தின் டீசர், இசைவெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

12 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

13 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

13 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago