கடனில் இருந்து மீட்ட விஜயகாந்த்! அந்த மனிதரை இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்திக்காத விஜய்?

Published by
பால முருகன்

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து முடித்து படம் வெளியான பிறகு படம் தோல்வி அடைந்ததால் 40 லட்சம் கடன் வந்ததாகவும், இதனால் வீட்டை விற்கும் அளவிற்கு  நிலைமை வந்தது எனவும், பிறகு அவருக்கு செந்தூரபாண்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த்  அவரை ஒரு முறை கூட வீட்டிற்கு வந்து விஜய் பார்த்தது இல்லை என  நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மீசை ராஜேந்திரன் ” ஒரு முறை என்னிடம் விஜய் சார் சொன்னார் நான் இந்த அளவிற்கு இப்போது இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கேப்டன் தான். ஏனென்றால், நான் நடித்த நாளைய தீர்ப்பு திரைப்படம் சரியாக ஓடவில்லை. எங்களுக்கு கடன் ஆகிப்போச்சு 40 லட்சம் கடன் ஆகிவிட்டது என்று விஜய் என்னிடம் சொன்னது.

சென்னையில் எங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது. ஒன்னு அந்த வீட்டை விற்று கடன் அடைக்கவேண்டும். இல்லை என்றால் ஒரு படம் செய்துவிட்டு அதில் வரும் லாபத்தில் கடனை அடைக்கவேண்டும்” என விஜய் என்னிடம் கூறினார். அந்த சமயம் கேப்டன் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தது.

அந்த சமயத்தில் விஜயின் தந்தை செந்தூரப்பாண்டி  படத்திற்காக தேதி கேட்டுள்ளார். பிறகு விஜயகாந்த் நீங்கள் என்ன தேதி வேணும் என்று கேட்டாலும் கொடுக்கிறேன் என கூறிவிட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்தில் நடித்த பிறகு தான் விஜய் பட்டிதொட்டி எல்லாம் மிகவும் பிரபலமாகிவிட்டார். கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தபோது விஜயகாந்தின் மார்க்கெட் மிகவும் உச்சத்தில் இருந்தது.

அப்படி இருந்த தருணத்தில் செந்தூரபாண்டியன் எனும் சண்டைக்காட்சியை இல்லாத படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தது எல்லாம் மிகப்பெரிய விஷயம். விஜய் சாரை கடந்த  சில மாதங்களுக்கு முன்பு நான் ஹைதராபாத்தில் பார்த்தேன் அதற்கும் முன்பு பைரவா படத்தின் படப்பிடிப்பில் பார்த்தேன் எங்கு பார்த்தலும் என்னிடம் அவர் கேப்டன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டு விடுவார்.

ஆனால், விஜய் சார் கேட்கமட்டும் தான் செய்தார் நேரில் வந்து ஒரு முறை கூட அவரை பார்க்கவில்லை. எனக்கு உள்ளுக்குள் அந்த வருத்தம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. என்னிடம் கேப்டன் எனக்கு உதவி செய்து இருக்கிறார் என விஜய்யே சொல்லியிருக்கிறார் ஒருமுறை நேரில் வந்து பார்க்கலாமே? ரஜினி சார், சத்யராஜ் சார் என பலரும் பார்த்தார்கள். விஜய்யும் பார்த்திருக்கலாம் என்ற வருத்தம் தான் எனக்கு” எனவும் நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் விஜய்க்கு பெரிய அளவில் பிரபலமாக வாய்ப்பு கிடைத்த படம் செந்தூரப்பாண்டி  அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து உதவிய  விஜயகாந்தை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லையா? என வருத்தத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

4 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

4 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

5 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

6 hours ago