தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இயக்குனர் அருண்மாதேஷ் வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் .
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்புக்காக அந்த வனப்பகுதியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டுகளை வெடிக்க செய்து படப்பிடிப்பு நடத்துவதாகவும் விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்துவதாக புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து, தற்போது வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்துள்ளதாக தென்காட்சி மாவட்ட ஆட்சியர் துரை தெரிவித்துள்ளார். படக்குழுவிடம் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது..? என வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், படப்பிடிப்பு பகுதியில் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.
இதனைத்தொடர்ந்து, களக்காடு வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்துள்ளதாக, தென்காட்சி மாவட்டத்தின் ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் ஊடகத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…