Ponnambalam about vijayakanth [File Image]
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் மீது பலரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறார்கள். 90 ஸ் காலகட்டங்களில் படங்களில் வில்லன்களாக நடிக்கும் நடிகர்கள் கூட விஜயகாந்த் மீது பயம் கலந்த மதிப்பு வைத்து இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், விஜயகாந்தின் பேச்சுக்கு மறுவார்த்தை யாரும் பேசமாட்டார்கள்.
உதாரணமாக 90ஸ் காலகட்டத்தில் முன்னணி வில்லன் நடிகராக வளம் வந்த மன்சூர் அலிகான் எல்லா இடங்களிலும் கெத்தாக பேசிக்கொண்டு இருப்பார். ஆனால், விஜயகாந்த் பக்கத்தில் இருந்தால் மிகவும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பார். இதனை நீங்கள் பழைய வீடியோக்களை பார்த்தாலே தெரியும். மன்சூர் அலிகான் மாட்டுமின்றி நடிகர் பொன்னம்பலமும் கூட விஜயகாந்த் மீது பெரிய அளவு மரியாதை வைத்து இருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் விஜயகாந்தை பார்த்து பழைய வில்லன்கள் நடிகர்கள் எல்லாம் பயப்படுவது ஏன் என்ற கேள்வியை தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய பொன்னம்பலம் ” சாதாரணமாகவே விஜயகாந்த் மனிதநேயம் கொண்ட ஒரு நல்ல மனிதர். அவரிடம் யாரும் வேலை கேட்டு போனால் கூட அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார்.
அவரிடம் எதுவும் வேலை இல்லை என்றால் கூட பக்கத்தில் இருப்பவர்களிடம் நீ ஒரு நிறுவனம் தொடங்கி இருக்கா இவனை வேளைக்கு சேர்த்துக்கொள் என்று பார்ப்பவர்களுக்கு எல்லாம் வேலை வாங்கி கொடுப்பார். அதனைப்போலவே, சண்டைக்காட்சிகள் படமாக்கும்போது எங்களுக்கு அடிபடக்கூடாது என்று யோசிப்பார். இந்த மாதிரி நல்ல குணம் இருப்பதாலே அவர் மீது எங்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது” எனவும் நடிகர் பொன்னாம்பலம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…