சினிமா

நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க! நடிகை ரேகா குமுறல்!

Published by
பால முருகன்

சினிமாவில் 1980,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகைகளுக்கு பெரிதாக இந்த காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் வருவதில்லை. ஒரு சில நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கௌசல்யா, ரேகா, தேவயானி, சிம்ரன், உள்ளிட்ட நடிகைகளுக்கு எல்லாம் பெரிய அளவில் சொல்லும் படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த சூழலில் நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க என நடிகை ரேகா கூறியுள்ளார்.

ரேகா தற்போது மிரியம்மா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அந்த இசைவெளியீட்டு விழாவில் தான் நடிகை ரேகா வருத்தத்துடன் முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று பேசி இருக்கிறார்.

மேடையில் பேசிய அவர் ” சினிமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே சினிமாவில் எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடிக்கவேண்டும் மற்றபடி பணம் எல்லாம் எனக்கு முக்கியமே இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி நான் நடித்துக்கொடுப்பேன்.

இப்போது இருக்கும் சினிமாவே வேறு மாதிரி இருக்கிறது. ஏனென்றால், படத்தில் நடிக்கவேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு கால் செய்து படப்பிடிப்பு இருக்கு வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். ஆனால், அந்த சமயத்தில் எல்லாம் எங்களுக்கு முதலில் போனில் படத்தின் கதையை சொல்வார் ஹீரோ ஹீரோயினுக்கு சமமான கதாபாத்திரம் கொண்ட காட்சிகள் படத்தில் இருக்கும்.

ஆனால், இப்பொது எல்லாம் அப்படி இல்லை கமர்ஷியல் அதிகமான காரணத்தால் ஹீரோயின்களுக்கான காட்சிகள் குறைந்துவிட்டது. நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளுக்கு கூட இப்போதெல்லம் வாய்ப்புகள் கிடைக்கமாட்டிக்கிறது. என்னை விட திறமை வாய்ந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக ஊர்வசி போன்ற நடிகைகள் எல்லாம் எதற்காக தொடர்ச்சியாக படங்களில் நடிக்கமாட்டிக்கிறார்கள் என்ற கேள்வியும் எனக்கு இருக்கிறது.

நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க பல நடிகைகள் தயாராக இருக்கிறோம் நாங்களா வாய்ப்பு கேப்டத்தை விட நீங்களா வந்து தருவது தான் நன்றாக இருக்கும். வயது என்பது வெறும் நம்பர் என்று தான் நான் சொல்வேன் என்றென்றால் வயதானாலும் கூட நடிகைகள் நடிக்க முடியும். யோகோ செய்து கொண்டு உடலை சரியாக வைத்து கொண்டாலே போதும்.

இப்போதெல்லாம் நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க அப்படி செய்யாமல் நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். என்னை பொறுத்தவரை சினிமாவில் நான் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். என்னுடைய உயிர் இருக்கும் வரை சினிமாவில் நடித்து கொண்டே இருக்கவேண்டும் சென்னையில் இருக்கவேண்டும்” எனவும் நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago