பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.. சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி.!

Published by
கெளதம்

கைது 2 : கார்த்தியின் கேரியரில் கைதி ஒரு முக்கிய படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்து உருவாகியிருந்ததால் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. இப்படத்தில் ‘டில்லி’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்தி பெரும் புகழ் பெற்றார்.

மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹீரோ கார்த்தியும் பல பேட்டிகளில் கூறி வருகிறார்கள். அந்த வகையில், இன்று இரத்த தானம் செய்த தனது ரசிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டு விழாவில், நடிகர் கார்த்தி ‘கைதி 2’குறித்த அப்டேட்டை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் கார்த்தி கடந்த மே 25-ம் தேதி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் அவரது ரசிகர்கள் பல இடங்களில் ரத்த தானம் செய்தனர். இந்நிலையில், இன்று சென்னையில் தனது பிறந்தநாளில் ரத்த தானம் செய்த ரசிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டி, விருந்தளித்தார்.

அப்பொழுது, அந்த பாராட்டு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “2 படங்களை முடித்துள்ளோம், இரண்டுமே இந்த வருடம் ரிலீஸ் ஆகிவிடும், அடுத்ததாக சர்தார் 2 தயாராகி வருகிறது. அதன் பிறகு ‘கைதி 2’ வரிசையில் உள்ளது. அடுத்த வருடம் லோகேஷ் கனகராஜ் வரச் சொன்னார் திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கூறியதும் அரங்கமே கை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Published by
கெளதம்

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

2 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

40 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

2 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago