yashika aannand [file image]
சினிமாவில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் நடிகைகளிடம் சில இயக்குனர்கள், சில தயாரிப்பாளர்கள் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக நடிகைகள் வெளிப்படையாகவே சமீபகாலமாக கூறி வருகிறார்கள். குறிப்பாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள விசித்ரா தன்னிடம் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதாக அவருடைய பெயரை கூறாமல் தெரிவித்து இருந்தார்.
படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?
அவரை தொடர்ந்து நடிகை ஷகீலா ” கடந்த காலங்களில் நானும் இங்கு பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில் அல்லரி நரேஷின் தந்தை, மறைந்த இயக்குனர் ஈவிவி சத்யநாராயணா என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார். அவருடன் அட்ஜஸ்ட் செய்தால் அந்த படம் மட்டுமின்றி அடுத்ததாக மற்றோரு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்கள்.
நான் அவரிடமே சொன்னேன் சார் இப்ப இந்த படத்தில் நடிக்க பணம் கொடுத்திருக்காங்க. இன்னொரு பட வாய்ப்பு எனக்கு வேண்டாம்” என்று கூறியதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இந்த நிலையில், அவர்களை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் இன்னும் தொடருதா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! உண்மையை உடைத்த ஷகீலா!
இது குறித்து பேசிய அவர் ” அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் இப்போது தொடர்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. நடிகைகள் சினிமாவில் பெரிய அளவுக்கு பிரபமாவதற்கு முன்பு அதாவது ரொம்பவே கஷ்டபடும் சமயத்தில் வேண்டுமானால் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். ஒருத்தர் அப்படி கேட்க வருகிறார் என்றால் அவருடைய மனநிலையில், இவுங்க இப்போது தான் வளர்ந்து வருகிறார் இவரிடம் நாம் இப்படியெல்லாம் கேட்கலாம் என்று தோணும்.
ஆனால், அதுவே நாம் ஒரு லெவலுக்கு மேல் வளர்ந்து விட்டோம் என்றால் அதனை பற்றி நம்மளிடம் கேட்கவே யோசிப்பார்கள். ஆனால், நீங்கள் புதிதாக சினிமா துறையில் நுழைகிறீர்கள் என்றால், நீங்கள் தொழில்துறைக்கு புதியவராக இருக்கும்போது, மக்களுக்கு உங்களை யார் என்று தெரியாது. எனவே, அந்த மாதிரி சூழ்நிலையில், உங்களை அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தில் தள்ளுவது மிகவும் எளிதானது.
ஒரு லெவலுக்கு மேல் நீங்கள் பிரபலமாகிவிட்டிர்கள் என்றால் உங்களிடம் அதனை பற்றி பேசவே யோசிப்பார்கள். அதற்கு பிறகும் உங்களிடம் அந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் பற்றி எதாவது வந்தது என்றால் அதில் இருந்து நீங்க தன எஸ்கேப் ஆகி கொள்ள வேண்டும்” எனவும் நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் கடைசியாக சில நொடிகளில் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…