திருநீறு வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?. அட இது தெரியாம போச்சே..!

Published by
K Palaniammal

திருநீறு சைவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல் ஒரு அங்கமாக கருதப்படுகிறது .சைவத்தில் அங்கங்கள் என்றால், பஞ்சாட்சன மந்திரம் ருத்ராட்சம், விபூதி. இதில் மிக முக்கியமாக கருதப்படுவது திருநீறு இது பல வகைகளில் நன்மைகளை பெற்று தரும், அது என்னவெல்லாம் என்றும்  குளிக்காமல் திருநீறு வைக்கலாமா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

திருநீருக்கு நிறைய பெயர்கள் உண்டு .அதில் விபூதி என்றால் வி என்பது மேலான என்பதையும் பூ என்றால் ஐஸ்வரியம் என்பதையும் குறிக்கும், மேலான ஐஸ்வர்யத்தை தரக்கூடியது.. திருநீறு என்றால் நம்முடைய வினைகளை எல்லாம் நீராக்கி பஸ்பம் ஆக்குவது என்று பொருள்.

திருநீறு அணிந்தால் ஏற்படும் நன்மைகள்

சகல செல்வ நலன்களையும் தரக்கூடியது இந்த திருநீறு.மகாலட்சுமி வைணவ சமயத்தில் உள்ளவர், அவர் தானே செல்வங்களை கொடுப்பார் என நீங்கள் எண்ணலாம். தெய்வங்களுக்கு சைவம் வைணவம் கிடையாது ,அது நாமே உருவாக்கியதுதான்.

பூலோக காம தேனு  என கூற கூடியது  பசு. இந்தப் பசு மகாலட்சுமியின் சுலோகம் தான், அதனால் தான் வீ புது வீடு புகுதல் போன்ற சுப  காரியங்களில் கோ பூஜை செய்யப்படுகிறது. ஆகவே அந்த பசுவில் இருந்து பெறப்படும் சாணத்திலும் மகாலட்சுமி வாசம் பண்ணுவார் என்பது ஐதீகம். இந்த சாணத்தில் இருந்து தான் திருநீறு தயாரிக்கப்படுகிறது அதனால் அந்த திருநீரிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

  • காலை எழுந்ததும் குளித்த பிறகு திருநீர் அணிந்தால் தலையில் உள்ள தேவையற்ற நீரை உறிஞ்சி எடுக்கும்.
  • தலைவலி ஏற்பட்டால் முந்தைய காலத்தில் திருநீரை நீரில் கரைத்து பூசி விடுவார்கள் இது நெற்றியில் உள்ள தேவையற்ற நீரை  நீக்கி தலைவலியை குறைக்கும்.
  • திருநீறு அணிந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். அன்றாடம் திருநீர் அணிபவர்களுக்கு வசியம் செய்ய முடியாது.

குளிக்காமல் திருநீர் அணியலாமா?

திருநீறு என்பது தீட்டுக்களையும் துளக்குகளையும் போக்கக்கூடிய அருமருந்து. ஆக திருநீறு வைப்பதற்கு குளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதற்காக குளிக்காமலே தினமும் வைத்துக் கொள்ளலாம் என்றும்  இல்லை. ஒரு சில நேரங்களில் உடல்நிலை சரி இல்லாமல்  இருக்கும் ,இவ்வாறு குளிக்க முடியாத நேரங்களில் திருநீறு அணிந்தால் நீங்கள் நீராடிய பலனை தரும்.

ஆகவே திருநீறு என்பது ஒரு மருந்து இந்த மருந்தை நாம் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

12 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago