vibhuthi
திருநீறு சைவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல் ஒரு அங்கமாக கருதப்படுகிறது .சைவத்தில் அங்கங்கள் என்றால், பஞ்சாட்சன மந்திரம் ருத்ராட்சம், விபூதி. இதில் மிக முக்கியமாக கருதப்படுவது திருநீறு இது பல வகைகளில் நன்மைகளை பெற்று தரும், அது என்னவெல்லாம் என்றும் குளிக்காமல் திருநீறு வைக்கலாமா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
திருநீருக்கு நிறைய பெயர்கள் உண்டு .அதில் விபூதி என்றால் வி என்பது மேலான என்பதையும் பூ என்றால் ஐஸ்வரியம் என்பதையும் குறிக்கும், மேலான ஐஸ்வர்யத்தை தரக்கூடியது.. திருநீறு என்றால் நம்முடைய வினைகளை எல்லாம் நீராக்கி பஸ்பம் ஆக்குவது என்று பொருள்.
திருநீறு அணிந்தால் ஏற்படும் நன்மைகள்
சகல செல்வ நலன்களையும் தரக்கூடியது இந்த திருநீறு.மகாலட்சுமி வைணவ சமயத்தில் உள்ளவர், அவர் தானே செல்வங்களை கொடுப்பார் என நீங்கள் எண்ணலாம். தெய்வங்களுக்கு சைவம் வைணவம் கிடையாது ,அது நாமே உருவாக்கியதுதான்.
பூலோக காம தேனு என கூற கூடியது பசு. இந்தப் பசு மகாலட்சுமியின் சுலோகம் தான், அதனால் தான் வீ புது வீடு புகுதல் போன்ற சுப காரியங்களில் கோ பூஜை செய்யப்படுகிறது. ஆகவே அந்த பசுவில் இருந்து பெறப்படும் சாணத்திலும் மகாலட்சுமி வாசம் பண்ணுவார் என்பது ஐதீகம். இந்த சாணத்தில் இருந்து தான் திருநீறு தயாரிக்கப்படுகிறது அதனால் அந்த திருநீரிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
குளிக்காமல் திருநீர் அணியலாமா?
திருநீறு என்பது தீட்டுக்களையும் துளக்குகளையும் போக்கக்கூடிய அருமருந்து. ஆக திருநீறு வைப்பதற்கு குளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதற்காக குளிக்காமலே தினமும் வைத்துக் கொள்ளலாம் என்றும் இல்லை. ஒரு சில நேரங்களில் உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் ,இவ்வாறு குளிக்க முடியாத நேரங்களில் திருநீறு அணிந்தால் நீங்கள் நீராடிய பலனை தரும்.
ஆகவே திருநீறு என்பது ஒரு மருந்து இந்த மருந்தை நாம் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…