Good Friday
Good Friday- புனித வெள்ளி சிறப்புகள் , இயேசுவுக்கு ஏன் சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
இயேசு வாழ்ந்த காலத்தில் ரோமர்கள் குற்றவாளிகளுக்கு ஐந்து விதமான கொடுமையான தண்டனைகளை கொடுப்பது வழக்கம்.
1.கல்லெறிதல்,2. மிருகங்களுக்கு இறையாக்குதல், 3.அக்கினி சூளையில் எரித்தல், 4.வாளால் அறுத்தல், 5.சிலுவையில் அறைதல். இதில் மிகக் கடுமையான தண்டனை சிலுவையில் அறைதல்.
இயேசு சிலுவையில் அறைந்தது ரோமர்களின் அதிகாரத்தால் அல்ல. “மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்க பட்டவன் என எழுதி இருப்பதன் படி இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டது பிதாவாகிய தேவன் முன்பே தீர்மானித்ததினால் தான்.
இப்படி சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் மனித குலத்திற்கு சில ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்தார். இயேசு சிலுவையில் தொங்கும் போது சில தெய்வீக பரிமாற்றங்கள் பரிமாறப்பட்டது. அவை தான் ஏழு கட்டளைகள் என கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.
1.இயேசு தண்டிக்கப்பட்டார் ,நாம் மன்னிக்கப்பட்டோம் .
2.நாம் நீதிமான்களாக்கும்படி அவர் பாவமானார்.
3.நாம் ஐஸ்வர்யவன்களாகும்படி அவர் தரித்திரரானார் .
4.நமக்கு புகழ்ச்சி அவருக்கு அவமானம்.
5.நமக்கு தேவ சாயல் இயேசுவிற்கு ஆதாமின் சாயல்.
6.இயேசுவிற்கு சிலுவை நமக்கு சிங்காசனம்.
7.இயேசுவிற்கு மரணம் நமக்கு நித்திய ஜீவன்.
இயேசு சிலுவையில் அறைந்த போது இப்படி பல தெய்வீக பரிமாற்றங்கள் மாற்றப்பட்டு பல ஆசிர்வாதங்கள் நமக்கு சொந்தமாக்கப்பட்டது .
ஆகவே நாளைய தினத்தில் இயேசுவின் அன்பை நினைத்துப் பார்ப்போம். அவருக்காக நம்மை அர்ப்பணித்து சாட்சியாக வாழ்வோம்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…