தானம் உயர்ந்ததா ? தர்மம் உயர்ந்ததா ? என சந்தேகமா… அப்போ இந்த பதிவை படிங்க..!

Published by
K Palaniammal

தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் எது உயர்ந்தது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தானம்
பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு கேட்காமலே நாம் செய்வது தானமாகும்.உதாரணமாக இந்த தானம் செய்தால் தனக்கு இவ்வளவு பலன் கிடைக்கும் என அறிந்து செய்வதாகும் .

தர்மம்

தர்மம் என்பது ஒருவர் கேட்டு நாம் உதவி செய்வதும் அதற்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வதும் ஆகும்.அதாவது வலதுகையில் கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் இருப்பது .விளம்பரம் செய்யாமல் கொடுப்பது .

மனித வாழ்வில் தானம் மிக அவசியமானது அதைவிட தர்மம் மிக மிக அவசியம். தர்மம் செய்த பாவத்தை மீண்டும் செய்ய விடாது புண்ணியத்தை நிலைநாட்டும். நாம் இந்தப் பிறவி எடுத்ததை ஊழ்வினையின் பலன் தான். நாம் செய்த வினைகளை முடிப்பதற்காக இப்பிறவி எடுத்துள்ளோம். எந்த ஒரு தர்மம் செய்தாலும் அதன் பலனை எதிர்பார்க்காமல் செய்தால் அது நமக்கு கவசமாக இருக்கும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.

தான தர்மம் பணமாகவோ, உணவாகவோ, உடையாகவோ தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. ஆறுதலாக சில வார்த்தைகளைக் கூட தான தர்மமாக கொடுக்கலாம். குறிப்பாக நமக்கும் கீழ் உள்ளவர்கள் கோடி என்ற  வரிகளுக்கு இணங்க நம்மை விட கஷ்டப்படுபவர்கள் உள்ளார்கள், அவர்களுக்கு  நிச்சயம் உதவி செய்ய வேண்டும். அது எந்த உயிராக இருந்தாலும் சரி.

ஆகவே நம் வாழ்வில் பாவம் குறைந்து, புண்ணியம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் இவை இரண்டுமே செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக தர்மம் செய்ய வேண்டும் ஏனெனில் தர்மம் தலைகாக்கும் நாம் செய்யும் தர்மம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினரையும் நலமுடன் வாழ செய்யும்.நம் சந்ததியினருக்கு சொத்து, பணம் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ தானம் தர்மத்தை சேர்த்து வைப்போம்.தர்மம் தலைகாக்கும்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

13 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

36 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

2 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago