ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

Published by
K Palaniammal

பிரத்தியங்கிரா தேவி– பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம்.

பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.நடை திறக்கும் நேரம் காலை 6.30-1.30 . மாலை 3 – எட்டு மணி வரை.

ஆலயத்தின் சிறப்புகள் :

இந்த அம்மன் ராஜகோபுரம் அளவிற்கு உயரமாகவும் ,உக்கிரமாகவும், சிங்க வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

அம்மனின் உருவம் நரசிம்ம உருவம் போலும் , உடல் பெண் உருவம் கொண்டும், முகம் சிங்கமுகத்துடனும், சிங்க வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இவரை இந்து சமய வேதமான  அதர்வண வேதத்தில் அதர்வன காளி எனவும் கூறுகின்றனர்.

அம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக அம்மாவாசை,பௌர்ணமி  தினங்களில் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது .

இந்த யாகத்தில் மிளகாய் கிலோ கணக்கில் போடப்படுகிறது. இந்த சிறப்பு யாகத்திற்கு மிளகாய் வாங்கிக் கொடுப்பதன் மூலம் கண் திருஷ்டிகளை நீக்கி ,எதிரிகளை துவம்சம் செய்யப்படும் அம்மன் எனவும் நம்பப்படுகிறது.

மேலும் பிரத்யங்கிரா தேவியை வீட்டில் வைத்து வழிபடும்போது தன் பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களையும், பயங்களை போக்கி,அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் எதிரிகளையும் தும்சம் செய்கிறார் என்றும் நம்பப்படுகிறது .

அதுமட்டுமல்லாமல் பில்லி ,சூனியம்,ஏவல்  தன் பக்தர்களை நெருங்காமல் பாதுகாப்பவள் ஆவார்.  எத்தனையோ உக்கர தெய்வங்கள் இருந்தாலும் இந்த அம்மன் உக்கரத்தின் உச்சம் எனவும் கூறப்படுகிறது.

அம்மனின் வரலாறு:

விஷ்ணு பகவான்  நரசிம்ம அவதாரம் எடுத்து  இரணியனை அழித்த பிறகும்  கோபம் குறையவில்லை. இவரை சமாதானப்படுத்த சிவபெருமான் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து அடக்க செல்கிறார் .

அப்போது நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற பறவையை உருவாக்கி சரபேஸ்வரருடன் சண்டையிட செய்கிறார் , இதனை அழிக்க சரபேஸ்வரின் நெற்றியில் இருந்து தோன்றியவர்தான் பிரத்தியங்கிரா தேவி எனவும் வரலாறு கூறப்படுகிறது.

அவ்வாறு தோன்றும்போது இந்த அம்மன் ஆயிரம் சிம்ம தலைகள்  கொண்டும்  2000 கைகளுடனும் தோன்றுகிறார்.

எனவே பயம், கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் இதிலிருந்து விடுபடலாம்.

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

2 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

3 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

6 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

6 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

7 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

7 hours ago