Categories: வரலாறு

சேவையே மூலமான உலக செஞ்சிலுவை தினம் இன்று(08.05.2022)..!

Published by
Sharmi

இன்று வரலாற்றில் உலக செஞ்சிலுவை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சேவை என்பது இந்த உலகில் யாரிடமும் எதையுமே எதிர்பார்க்காமல் ஒருவரின் தேவையை உணர்ந்து அந்த தேவையை பூர்த்தி செய்வதே சேவை ஆகும். அந்த சிறப்பான பணியை  உலகளவில் செய்து பெரும் பாராட்டை பெற்ற அமைப்பின் பெயர் ரெட் கிராஸ் என்னும் செஞ்சிலுவை அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 8ம் தேதி ‘உலக செஞ்சிலுவை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ரெட் கிராஸ் அமைப்பின் வரலாற்றை பற்றி அறிந்து கொள்வோம்.

1859ம் ஆண்டு சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல வியாபாரியும், கோடீஸ்வரருமான ஹென்றி டுனான்ட், தனது வர்த்தகம் தொடர்பாக இத்தாலியில் உள்ள சோல்பெரினோ என்ற நகருக்கு வந்தார். அப்போது அந்நகரில் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அங்குள்ள ஒரு வீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த போர்களினால்  காயமடைந்தவர்கள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியபடியே இருந்தனர். குழந்தைகளும் உணவுக்காக கதறி அழுதன. அதையெல்லாம் கண்ட ஹென்றிக்கு வர்த்தக உணர்வு மறைந்தது. காயமடைந்த ராணு வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை செய்தார்.

அவரோடு அங்குள்ள மக்களும் இணைந்து சேவையில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல்  ஐரோப்பா முழுவதும் சென்று போருக்கு எதிராக பிரசாரம் செய்தார். அப்போது தோற்றுவிக்கப்பட்டதுதான் ‘யங்மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன்’ (YMCA) எனப்படும் செஞ்சிலுவை சங்கம் ஆகும். பெரும் கோடீஸ்வரரான ஹென்றி சமூக சேவையில் முழு நேரத்தையும் செலவழித்ததால், செலவுக்கே வழியின்றி தடுமாறினார். முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உணவிட்ட ஹென்றி தனது ஒருவேளை உணவுக்கே வழியின்றி மிகவும் சிரமப்பட்டார். ஆனால், அவரது சங்கங்கள் பல நாடுகளுக்கு பரவி உலகளாவிய சிறந்த அந்தஸ்து பெற்றது.

இவரது அரிய செயல்பாடுகளுக்காக 1901ல் அமைதிக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1910, அக்டோபர் 30ல் மறைந்தார். இந்த சேவை அமைப்பானது, இயற்கை பேரிடர், போரில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஞ்சிலுவை சங்கம் நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இச்சங்கமானது 7 முக்கிய கொள்கையை முன்னிறுத்தி சேவை செய்து வருகிறது.

மனித உயிர்களையும், அவர்களுக்கான ஆரோக்கியத்தையும் உறுதி செய்தல், தேசம், இனம், ஜாதி பாகுபாடின்றி ஒருவரின் துயரத்தில் பங்கு கொள்ளுதல், அரசு மற்றும் அரசியல் சார்ந்த கொள்கைகளில் ஈடுபடாமல் இருத்தல், ஒவ்வொரு நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்தல். யாருடைய விருப்பு, வெறுப்புகளுக்கும் உட்படாமல் சேவை செய்தல். சேவையின்போது ஒற்றுமையை கடைப்பிடித்தல், சேவை சங்கங்கள் அனைத்துமே மிகுந்த பொறுப்பு, கடமை கொண்டவை, இப்படி கொள்கைகளை வகுத்து செயல்படுகிறது.

Recent Posts

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

22 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

58 minutes ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

1 hour ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

2 hours ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

3 hours ago