வேலைவாய்ப்பு

10 லட்சம் சம்பளம்..மொபைல் கேம் விளையாடினாலே போதும்..! பிரபல நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

Published by
செந்தில்குமார்

தற்போதைய நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் இளம் வயதினர் மத்தியில் ஸ்மார்ட்போன் உபயோகம் என்பது கணக்கிட முடியாத அளவில் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போனில் வீடியோக்கள் பார்ப்பதை தவிர கேம் விளையாடுவதற்கும் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், பிரபல மொபைல் நிறுவனமான ஐ-க்யூ (iQOO) அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் முதல் தலைமை கேமிங் அதிகாரி (CGS) பணிக்கு மொபைல் கேமிங்கில் ஆர்வமுள்ளவர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு https://www.iqoo.com/in என்ற இணையதளத்தில் உள்ளது.

வயது மற்றும் சம்பளம்: 

தலைமை கேமிங் அதிகாரி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக, அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும். தலைமை கேமிங் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.10 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.

தலைமை கேமிங் அதிகாரியின் (CGO) பங்கு என்ன.?

  • அறிமுகமாக உள்ள iQOO போன்களில் கேம்களை விளையாடி அதனை மதிப்பாய்வு செய்த பிறகு மதிப்புமிக்க நுண்ணறிவு தகவல்களை வழங்க வேண்டும்.
  • iQOO சமூகத்தில் உள்ள மொபைல் கேமர்களின் ஆர்வங்கள் மற்றும் தேவைககளை பற்றி பேச வேண்டும்.
  • மொபைல் கேமர்களுடன் தொடர்பில் இருந்து வலுவான உறவுகளை உருவாக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • iQOO அதிகாரப்பூர்வ https://www.iqoo.com/in இணையத்தளத்தைத் திறக்கவும்.
  • படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நிரப்பி பதிவு செய்யவும்.
  • எதிர்கால தேவைக்காக பதிவு செய்த படிவத்தின் ஸ்னாப்ஷாட்டை எடுக்கவும்.

தகுதி மற்றும் பணியின் காலம்:

தலைமை கேமிங் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் 6 மாதம் பணியில் இருப்பார். வேறு நிறுவனத்தில் பணிபுரிபவரும் இதற்கு பதிவு செய்யலாம். இதற்கு எந்தவித பட்டமும் பெற்றிருக்க வேண்டியதில்லை. விளையாட்டில் ஆர்வம் மற்றும் திறமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே போதுமானது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

12 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

13 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

13 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago