வேலைவாய்ப்பு

10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.! ICMR-இல் பல்வேறு காலிப்பணியிடங்கள்.!

Published by
மணிகண்டன்

10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் ICMR-இல் டெக்னீஷியன்கள் மற்றும் பல்பணி ஊழியர்களுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி மையமான ICMR ( National Institute for Research in Environmental Health) இல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெக்னீசியன் மற்றும் உதவியாளர்கள் (Multi Tasking Staffs) பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுளள்ன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் ICMR இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை தபால் மூலம் போபால் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் இதற்கான கடைசி தேதி ஜூலை 15, 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணிகள்

  • குரூப்- சி டெக்னீசியன்கள்.
  • பல்பணி ஊழியர்கள் ( MultiTasking Staffs).

காலியிடங்கள் :

  • டெக்னீசியன்கள் – 20.
  • பல்பணி ஊழியர்கள் (MultiTasking Staff)s – 8.

கல்வித்தகுதி :

  • குறைந்த பட்சம் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண் உடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • 18,000 முதல் 68,200 ரூபாய் வரை (அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப)

வயது வரம்பு –

  • டெக்னீசியன் வேலைக்கு 28வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பல்பணி ஊழியர் வேலைக்கு 25வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • SC/ST பிரிவினருக்கு 5 வயது தளர்வு.
  • OBC பிரிவினருக்கு 3 வயது தளர்வு.
  • மாற்று திறனாளிகளுக்கு 10 வயது தளர்வு. (40 சதவீதத்திற்கு மேல்)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் செய்யப்படும் நபர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • 300 ரூபாய் வங்கி வரையோலை (DD- Demand Draft) குறிப்பிட்ட முகவரிக்கு எடுத்து விண்ணப்ப படிவத்துடன் எழுதி அனுப்பி வேண்டும்.
  • SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு டிடி எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15 ஜூலை 2023 (தபால் மூலம்)

விண்ணப்பிக்கும் முறை : 

  • தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி மையமான ICMR இணையதளமான  www.igcrect.injoinindiannavy.gov.in -க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து குறிப்பிட்ட வேலைக்கான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில், பெயர், முகவரி, படிப்பு, உள்ளிட்டவையை நிரப்பி அப்ப்ளிகேஷனில் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
  • அந்த அப்ளிக்கேஷன் உடன் 300 ரூபாய் வங்கி வரையோலை மற்றும் தகுதி சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
  • அந்த அப்ளிகேஷன் மூலம் தேர்ந்தெடுக்கும் நபர்கள் தேர்வு எழுத அழைக்கப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

4 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

5 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

5 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

6 hours ago