வேலைவாய்ப்பு

பவர் கிர்டு இந்தியாவில் அப்ரன்டீஸ் பயிற்சி.! 10ஆம் வகுப்பு முதல் B.E/B.Tech முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்…

Published by
மணிகண்டன்

பவர் கிர்டு இந்தியாவில் அபிரன்டீஸ் பயிற்சிக்கு 10ஆம் வகுப்பு முதல் B.E/B.Tech முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர் கிர்டு கார்ப்பரேஷன் இந்தியாவில் அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (01-ஜூன்-2023) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • பட்டதாரி (மின்சாரம்) – 282 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (கணினி அறிவியல்) – 8 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (எலக்ட்ரானிக்ஸ்/ தொலைத்தொடர்பு பொறியியல்) – 7 காலிப்பணியிடங்கள்.
  • HR நிர்வாகி – 94 காலிப்பணியிடங்கள்.
  • CSR நிர்வாகி 16 காலிப்பணியிடங்கள்.
  • PR உதவியாளர் 10 காலிப்பணியிடங்கள்.
  • ஐடிஐ – எலக்ட்ரீஷியன் – 161 காலிப்பணியிடங்கள்.
  • டிப்ளமோ (எலக்ட்ரிக்கல்) – 215 காலிப்பணியிடங்கள்.
  • டிப்ளமோ (சிவில்) – 120 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (சிவில்) – 112 காலிப்பணியிடங்கள்.
  • சட்ட நிர்வாகி – 7 காலிப்பணியிடங்கள்.
  • செயலக உதவியாளர் – 3 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு முதல் ITI/ டிப்ளமோ, B.E / B.Tech, MBA வரை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்றவாறு படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூ.13,500 முதல் தகுதி அடிப்படியில் சம்பளம் வகுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 

  • குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 01 ஜூலை 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் – குறிப்பிடப்படவில்லை .

விண்ணப்பிக்கும் முறை : 

  • பவர் கிர்டு கார்ப்பரேஷன் இந்தியா அதிகாரபூர்வ தளமான www.powergrid.inக்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் இந்தியாவில் எந்த பகுதியில் , எந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு பணியமர்த்தப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

21 minutes ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

49 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

1 hour ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

1 hour ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

1 hour ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

2 hours ago