வேலைவாய்ப்பு

இளம் சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்புகள்… விவரங்கள் இதோ….

Published by
மணிகண்டன்

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையான NHAIஇல் 50  வேலைவாய்ப்புகள் அறிவிய்க்கப்பட்டுள்ளன. 

தேசிய நெடுஞ்சாலைத்துறையான NHAI (National Highways Authority of India) வில் சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 50 துணை பொறியாலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மதாம் கடைசிக்குள் (ஜூன் 30, 2023) இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், UPSC கடந்த 2022இல் நடத்திய பொறியியல் சர்வீஸ் தேர்வில் (Engineering Service Exam) எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

காலிப்பணிகள் –

  • துணை பொறியாளர் (Deputy Manager (Technical))

காலியிடங்கள் :

  • பொது பிரிவு – 33.
  • SC பிரிவு – 4
  • ST பிரிவு – 1
  • OBC பிரிவு -11
  • EWS -1

மொத்தம் 50

கல்வித்தகுதி :

  • குறைந்தபட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதலாக UPSC நடத்திய பொறியியல் சர்வீஸ் தேர்வில் (Engineering Service Exam) பங்கேற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூபாய். 15,600/- முதல்  39,100 (தகுதி அடிப்படியில்)
  • கூடுதலாக 5,400 ரூபாய் (கிரேடு ஊதியம்)

வயது வரம்பு (அதிகபட்சம்): 

  • அதிகபட்சம் 30 வயது வரை (அரசு விதிமுறைகள் படி தளர்வு அளிக்கப்படும்.)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • விண்ணப்பித்தவர்களின் UPSC 2022இல் நடத்திய Engineering Service Exam-இல் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரப்பூர்வ தளமான vacancy.nhai.org க்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஏற்கனவே பயனர் ஐடி வைத்து இருப்பவர்கள் அதனை உள்ளீடு செய்யலாம். இல்லையென்றால் விவரங்களை கொடுத்து புதிய கணக்கு துவங்கி உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) விண்ணப்பிக்கலாம்.
  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அடுத்தகட்ட நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

10 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

11 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago