Central Bank of India [file image]
Central Bank: மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, அப்ரண்டிஸ் வேலைக்கான 3000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான Central Bank of India விண்ணப்பிக்கவும். மேலே காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் வங்கியின் உண்மையான தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் விருப்பப்படி, அந்தந்த மாநிலங்களில் உள்ள கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இருக்கும் பணிகளில் சேர்க்கப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 21-02-2024 அன்று தொடஙகியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் 27-03-2024 அன்று முடிவடைகிறது. இதனை தொடர்ந்து 31-03-2024 அன்று தேர்வு நடைபெறுகிறது.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800 எனவும், SC,ST,EWS பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பேமெண்ட்
விண்ணப்பதாரர்கள் கட்-ஆஃப் தேதியின்படி 01.04.1996 முதல் 31.03.2004 வரை பிறந்திருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
கிராமப்புற, அரை நகர்ப்புற கிளைகள், நகர்ப்புற கிளைகள், மெட்ரோ கிளைகளில் ரூ.15,000 வழங்கப்படும்.
வங்கியிடமிருந்து ஆன்லைன் மூலம் தொழிற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறும் விண்ணப்பதாரர்கள் அதை குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தற்காலிகமாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…