வேலைவாய்ப்பு

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான வேலைவாய்ப்பு..! மாதம் ரூ.22,744 சம்பளத்துடன்..சீக்கிரம் விண்ணப்பிங்க..!

Published by
செந்தில்குமார்

ஐசிஎஸ்ஐஎல் (ICSIL) காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Intelligent Communication Systems India Limited – ICSIL) டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆள்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் சேருவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் சமையல்காரர்(1) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்(5)(Data Entry Operator) பணிகள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன.

தகுதி: 

  • சமையல்காரர் பணிக்கு படிப்பு தகுதி தேவையில்லை.
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பி.எஸ்.சி(B.Sc) / பி.ஏ.(BA) / பி.காம் (B.Com) பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
  • MS Word, MS Excel, MS Powerpoint போன்ற பயன்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும்.
  • ஆங்கிலம்/இந்தியில் தட்டச்சு வேகம் குறைந்தபட்சம் 30wpm ஆக இருக்க வேண்டும்.
ICSIL Recruitment [Image Source : ICSIL]

அனுபவம்:

  • மருத்துவமனை சமையலறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
  • அரசு மருத்துவ நிறுவனத்தில் குறைந்தபட்சம் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவ நிறுவனத்தில் அலுவலக உதவியாளர்/DEO ஆக குறைந்தது 3 மாதங்கள் இருக்க வேண்டும்.

வயது:

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவரின் வயது 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் https://icsil.in/app/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி (உயர்நிலைப் பள்ளி முதல் உயர்நிலைத் தகுதி வரை) மற்றும் அனுபவம் என அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தில் நிரப்பவும்.
  • ஒரு பதவிக்கு விண்ணப்பிக்க, வேட்பாளரின் சுயவிவரம் அந்த பதவிக்கான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களுடன் பொருந்த வேண்டும்.
  • விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகமிருப்பின் Help -ஐ கிளிக் செய்து எப்படி விண்ணப்பிப்பது என்பதை காணலாம்.
  • இது தொடர்பான கேள்விகள்/உதவிகளுக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம்.
ICSIL Recruitment [Image Source : ICSIL]

விண்ணப்பக்கட்டணம்: 

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவினரும் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

சம்பளம் மற்றும் கடைசி தேதி:

சமையல்காரர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் 18,993 ரூபாயும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் 22,744 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 5 ஆகும். கடைசி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

12 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

12 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

13 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago