Job Vacancy [file image]
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் – உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில் பணிபுரிய தகுதி உள்ள 660 பேருக்கான தேடலில் இருந்து வருகின்றனர். டிப்ளமோ, டிகிரி முடித்து விட்டு உளவுத்துறையில் ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு ஏதுவாக இருப்பீர்கள். மத்திய அரசின் கீழ் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சரியாகசமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த வேலைக்கான முழு விவரத்தையும் பார்க்கலாம்.
இந்த உள்துறை அமைச்சகம்/புலனாய்வுப் பணியகம் துறையில் ACIO, PA, JIO, SA போன்ற நிலைக்கு மொத்தம் 660 காலிப்பணியிடங்கள் உள்ளன. IB ஆட்சேர்ப்பிர்க்கான தேர்வுப் பட்டியல், தேர்வுத் தேதி, பாடத்திட்டம், தேர்வு அனுமதி அட்டை, தேர்வு முறை போன்றவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மேலும், பொறியியல் பட்டதாரி /டிப்ளமோ பட்டதாரி போன்றவற்றை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த IB ஆட்சேர்ப்புக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும் விவரங்களுக்கு mha.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் கடந்த 13.03.2024 அன்று தொடங்கியுள்ளது, மேலும் 12.05.2024 இதற்கான கடைசி தேதியாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த வேலைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயது மீகாமல் இருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள் என்று அறிவித்திருக்கின்றனர். மேலும், இந்த பணியிடங்களுக்காண கட்டண தகுதி எதுவும் குறிப்பிடவில்லை மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகலாம்.
விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் Joint Deputy Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021 இந்த முகவரிக்கு 12.05.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், ஏதேனும் விவரங்கள் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ mha.gov.in இணையத்தில் சென்று Notification –> Vacancies உள் சென்று பார்த்தால் அதில் இந்த வேலைக்கான சரியான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…