வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் அப்ரண்டிஸ் வேலை.! பயற்சி பெற்றுக்கொண்டே மாதச் சம்பளம்…

Published by
கெளதம்

ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர், 70 அப்ரண்டிஸ் பணிக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரால் (NRSC) வெளியிடப்பட்ட NRSC என்ற அதிகாரப்பூர்வ இணையதளயத்திற்கு சென்று படிக்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பிடெக், டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக்கான வயது:

குறைந்தபட்ச வயது 15 முதல் அதிகபட்ச வயது வரம்பு 24 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

பதவிகள்:

கிராஜுவேட் அப்ரெண்டிஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ், டிப்ளமோ அப்ரெண்டிஸ்.

சம்பளம்:

கிராஜுவேட் பயிற்சியாளர்களுக்கு 17 காலி பணியிடங்கள் உள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.9000, டெக்னீசியன் பயிற்சியாளர்களுக்கு 30 காலி பணியிடங்கள் உள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.8000, டிப்ளமோ பயிற்சியில் 23 காலி பணியிடங்கள் உள்ளது அவர்களுக்கு மாதம் ரூ. 8000 சம்பளம் வழங்கபடுகிறது.

துறைகள்:

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கமர்ஷியல் மற்றும் கம்ப்யூட்டர் பிராக்டீஸ் ஆகியவை அடங்கும்.

கட்டணம் செலுத்தவும் முறை:

விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களை விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பேமெண்ட் கேட்வே மூலம் பயிற்சி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் அல்லது டெபிட் கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த மே 13 முதல் ஜூன் 2 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

ஆன்லைன் பதிவு மற்றும் சமர்ப்பிப்பு ஜூன் 2ம் தேதியுடன் முடிவடையும். பயிற்சி விண்ணப்பப் படிவத்தை குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது, மேலும் இது தொடர்பான கடிதப் பரிமாற்றம் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

11 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

12 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

12 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago