SEBI Officer Grade A Recruitment 2024 [IMAGE SOURCE: Business Today]
SEBI: இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), அதிகாரி கிரேடு A (உதவி மேலாளர்) காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செபி என்பது இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.
அதாவது, பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், பத்திரச் சந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கு நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பில் தான் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செபியில் காலியாக உள்ள Grade Aவில் (உதவி மேலாளர்) 97 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எனவே, இந்த வேலைவாய்ப்புக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி அடுத்த மாதம் 13ம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான பணிகள் 62, சட்ட ரீதியிலான பணிகள் 5, தகவல் தொழில்நுட்பம் 24, பொறியியல் (மின்சாரம்) 2, ஆராய்ச்சி 2, உத்தியோகபூர்வ மொழி 2 என மொத்தம் 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிஜியில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் ஏப்ரல் 01, 1994 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். இருப்பினும், விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.
OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் மற்ற கட்டணங்களை சேர்த்து ரூ. 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள SEBI-Notification-Officer-Grade-A-Assistant-ManagerPosts என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…
பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…
மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…