வேலைவாய்ப்பு

ITI முடித்திருந்தால் மத்திய அரசு வேலை… உடனே விண்ணப்பியுங்கள்… விவரம் இதோ…

Published by
மணிகண்டன்

மத்திய அரசின் SPMCIL துறையில் ஐடிஐ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் SPMCIL (Security Printing and Minting Corporation of India) பிரிவின் கீழ் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஐடிஐ (ITI) எனும் தொழிற்கல்வி படிப்பை முடித்து இருக்க வேண்டும். மேலும், அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

இதற்கு வரும் 15 ஜூன் 2023 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 15 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும், அலுவகக பணிகளுக்கு 28 வயதாகவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலிப்பணிகள் :

  • ஜூனியர் டெக்னீசியன்.
  • ஜூனியர் உதவி அலுவலர்.

காலியிடங்கள் :

  • ஜூனியர் டெக்னீசியன் – 56.
  • ஜூனியர் உதவி அலுவலர் (இரு பிரிவுகள்)- 8 (6+2).

கல்வித்தகுதி :

  • ஜூனியர் டெக்னீசியன் – ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
  • ஜூனியர் உதவி அலுவலர் – ஏதேனும் ஒரு டிகிரி முடித்து தட்டச்சு திறன் பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) : ரூ. 18,780/- முதல் ரூ.67,390/-

வயது வரம்பு (அதிகபட்சம்): 

  • ஜூனியர் டெக்னீசியன் – அதிகபட்ச வயது – 25.
  • ஜூனியர் உதவி அலுவலர் – அதிகபட்ச வயது – 28.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • கணினி வாயிலாக தகுதி தரவு நடத்தி மதிப்பெண் அடிப்படியில் வேலை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி – 15 ஜூன் 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15 ஜூலை 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • SPMCIL இன் அதிகாரபூர்வ தளமான spmcil.com க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் வெளியிப்படட்ட உரிய வேலைவாய்ப்பு லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பயனர்கள் தங்கள் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago