கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த தினம் இன்று!

Published by
லீனா

காமராசர் 1903-ம் ஆண்டு, ஜூலை 15-ம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார். இவர் சத்ரிய வித்யா சாலா என்ற பள்ளியில் தனது படிப்பை தொடங்கினார். இவர் படிக்கும் போதே பொறுமையுடனும், விட்டுக் கொடுக்கும் மனதுடனும் விளங்கினார்.

இவர் தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையில், தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது இவர் அரசியல் தலைவர்களின் பேச்சால் இழுக்கப்பட்டு, சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு, அரசியலில் மிக தீவிரமாக களமிறங்கினார். பின் இவர் தனது 16-வது வயதில் காங்கிரசில் இணைந்தார்.

இவர் பல போராட்டங்களில் ஈடுபட்டு, பல தடவை சிறை சென்றுள்ளார். பல போராட்டங்களுக்கு பின் தடைகளை தாண்டி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலகட்டத்தில், மக்களின் வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில் வளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல திட்டங்களை நிறைவேற்றினார்.

உணவு கிடைக்காமல் பள்ளிக்கு செல்லாமல் இடைநிறுத்தம் செய்யும் பிள்ளைகளின் வாழ்க்கையில், கல்விக்கண் திறந்த மிகப் பெரிய தலைவர் தான் இவர். அன்று முதல் இன்று வரை மாணவர்களின் பசியை போக்கும் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் இவர் தான்.

பல துறைகளில் முன்னேற்றத்தையும், மாணவர்களின் வாழ்க்கையில் கல்விக் கண்ணை திறந்த படிக்காத மேதை காமராசர் அவர்கள், 1975-ம் ஆண்டு அக்டொபர் இரண்டாம் நாள் இறைவனடி சேர்ந்தார். இறக்கும் வரையில் வங்கிகளில் எந்த கணக்கோ, சொந்த வீடோ, இலலாமல், கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்த தலைவர், என பெருமை காமராசரை மட்டுமே சேரும்.

Published by
லீனா

Recent Posts

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

10 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

52 minutes ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

1 hour ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

3 hours ago